பாசமலர்...அண்ணன் இறந்ததும் தங்கையும் உயிரிழந்தார்!

ஜி.கே.சேகரன்,
அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு அடுத்த நொடியே அதிர்ச்சியில் உயிரிழந்த தங்கை,வயது முதிர்ந்த அண்ணன் - தங்கை ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பத்தூர்மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு, கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், (90) சிலம்பாட்ட வீரரான இவருக்கு 10 பிள்ளைகள் உள்ள நிலையில்,சீனிவாசன் கடந்த ஒரு மாதகாலமாக உடல் நலக்குறைவால் பாதிகப்பட்டிருந்தார்.
அவர் இன்று காலை உயிரிழந்துவிட்டார்.
அப்படியிருக்க, அவரது வீட்டின் அருகில் உள்ள சீனிவாசனின் தங்கை தவமணி (72) அண்ணன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நொடியே அவரும் உயிரிழந்துவிட்டார்.
அதனை தொடர்ந்து, அண்ணன் - தங்கை இருவரின் உடலும் ஒரே இடத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
அண்ணன் இறந்த செய்தியை கேட்ட அடுத்த நொடியே தங்கையும் உயிரிழந்த சம்பவம், அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.