மகளிர் அணியை சேர்ந்தவருடன் கும்மாளம் போடும் மக்கள் பிரதிநிதி! அட அசிங்கமே?

ஜி.சாந்தகுமார்,
ஒரு பலான சமாச்சாரம் திருப்பத்தூர் மாவட்ட அரசியல் வட்டத்தில் சுழன்றுக் கொண்டிருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதியாகவும், (தொகுதிக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்) முக்கிய கட்சியின் பொறுப்பாளராகவும் இருக்கக்கூடிய ஒருவர் பஞ்சாயத்து செய்வதில் பெரியா சாம்பியனாக திகழ்ந்தவராம்.
அப்படியிருக்க, அவர் வகிக்கக்கூடிய கட்சியில் மகளிர் அணியில் உள்ள ஒருவருக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
அதை அறிந்த இந்த மக்கள் பிரதிநிதி, அந்த பிரச்சனையை தாம் தீர்த்துவைப்பதாக மூக்கை நுழைத்தார். அப்புறம் என்ன? கணவரை ரெண்டு தட்டு தட்டி துரத்திவிட்டார். பின்னர் அந்த பெண்ணும் இவரும் ஆங்காங்கே தனிமையில் தென்பட்டிருக்கிறார்கள்.
அரசல் புரசலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது இந்த விவகாரம்.
இந்நிலையில் இந்தக் கள்ளத்தொடர்பு ஜோடி அதிமுக பிரமுகர் ஒருவரின் கண்களில் அகப்பட்டனர்.
வாணியம்பாடியில் புதியதாக கட்டப்பட்ட அரசு தங்கும் விடுதிக்கு அதிமுகவின் முக்கியஸ்தர் ஒருவர் சென்றாராம்.
அப்போது மேற்படி மகளிர் அணி பெண் அந்த விடுதியிலிருந்துள்ளார். அவர் அதிமுக காரரைப் பார்த்ததும் அங்கிருந்து பதற்றமுடன் எஸ்கேப் ஆகியிருக்கிறார்.
இந்நிலையில் அங்கிருந்த ஒரு அறை அவசர கதியில் சாத்தப்பட்டதாம். இது பற்றி அவர் விசாரித்த போது அதனுள் மேற்படி கட்சியின் பொறுப்பாளரான வேறு தொகுதியின் மக்கள் பிரதிநிதி இருக்கிறார் என்று அவருக்கு சொன்னார்களாம்.
ஓ....அதான் அந்த பெண் இப்படி ஓடியதா? அட அசிங்கமே என்று அங்கிருந்து திரும்பி விட்டாராம் அந்த அதிமுக பிரமுகர்.
எதிர்பாராத வகையில் சீட்டு கிடைக்கபெற்ற மேற்படி ஜல்சா பிரதிநிதி தொகுதியில் மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல், இப்படி மகளிர் அணி பெண்ணுடன் அறை அறையாக தங்கி கும்மாளம் அடிப்பது பற்றி பலருக்கும் தெரிந்துள்ளது.
குறிப்பாக கட்சி தலைமைக்கும் இந்த தகவல் பறந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல மகளிர் அணியச் சேர்ந்த தன்னுடைய நண்பிக்காக அரசு சலுகைகள் பலவற்றை இந்த தர்மகர்த்தா வாரி வழங்கி கட்சியின் சீனியர்களுக்கு பெப்பே காட்டி வருகிறாராம்.
மாவட்டத்துக்குள்ளேயே இப்படி கும்மாளம் போட்டு கட்சிக்கும், நிர்வாகத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் அவரை தலைமை கண்டிக்க வேண்டும் என்று அவர் கட்சியைச் சேர்ந்த சீனியர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
அட அசிங்கமே...தொகுதி நலனை விட்டுவிட்டு இப்படியா ஜல்சா பண்ணுவீங்க?