ஹலோ சாம்சங்! மேளம் கொட்டி முற்றுகை போராட்டம்!

ஜி.கே.சேகரன்,
உரிமைகளுக்காக போராடும் சாம்சங்க் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில்.சி.ஐடியு மறியல்... கைது - வேலூர் மாவட்டத்தில்50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் அனைத்து மக்களுக்கும் வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டிதர கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட பழங்குடியின இனமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினர் ஆகியோர் கைது.
வேலூர்மாவட்டம், வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில்,சி.ஐடியு சார்பில் மாநில துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சாம்சங்க் நிறுவன தொழிலாளர்களின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களுக்கு ஆதரவாக போராடும்.சி.ஐடியு தலைவர்களை கைது செய்யும் காவல்துறை அடக்குமுறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்
இதே போன்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் சார்பில் பழங்குடியினர் மக்கள் மேளம் அடித்து நூதன முறையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதில் கணியம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்குடியின மக்களுக்கு பட்டாவுடன் தொகுப்பு வீடு வழங்க வேண்டும் விஸ்வநாத நகர் பகுதியில் சாலைவசதி செய்து தர வேண்டும் மாநகராட்சி 60 வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரி மாவட்ட செயலாளர் சரோஜா தலைமையில் முற்றுகை போராட்டம் செய்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.