ஆட்சிக்கு வருவதன் மூலமாக தான் புதிய சமுதாயத்தை படைக்க முடியும்! கம்யூ முத்தரசன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
நாங்களும் ஆட்சி அமைப்போம், ஆட்சியர் அலுவலகம் எதிரில் தாணா போராட்டம் - திருப்பதி வெங்கடாஜலபதி லட்டில் கலப்படம் என காவல்நிலையத்தில் புகார் அளித்தார் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சார்பில் முத்தரசன் வேலூரில் பேட்டி
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் லதா தலைமையில் தர்ணா நடைபெற்றது. இதனை மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் துவங்கி வைத்தார்.மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
இதில் திரளானோர் பங்கேற்றனர்வேலூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்களை அமைக்க வேண்டும், குடியாத்தம் உள்ளி மாதனூரை இணைக்கும் இடத்தில் மேம்பாலம் அமைக்கவும் கேவிக்குப்பம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
இம்மாவட்டத்தில் மா விவசாயம் அதிகம் உள்ளதால் மாம்பழம் கூழ் தொழிற்சாலை அமைக்க கோரியும் மேல் அரசம்பட்டு அணையை விரைந்து கட்ட கோரியும், வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து நிறைவேற்றி கழிவுநீர் கால்வாய் தெருவிளக்குகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.
வேலூர் பகுதியில் 25 ஆயிரம் குடும்பங்கள் வீடில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க கோரியும் தனியார் நிதி நிறுவனமான ஐ.எப்.எஸ் வழக்கை விரைந்து முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப தர வேண்டும்.
ஆறுகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தவும் தென் பென்னை பாலாறு இணைக்கவும் உள்ளிட்ட 50அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் சொத்து வரி உயர்வுக்கு முக்கியமான காரணம் தமிழக அரசின் மத்திய அரசின் நெருக்கடியின் காரணமாக சொத்துவரியை தமிழக அரசு இரையாக கூடாது.
உயர்த்தியுள்ள சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். திருப்பதி லட்டு விவகாரம் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டது பன்றிகொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு அவர்கள் தெரிவித்தது பெரிய பூதாகர பிரச்சணையாக கிளம்பியது.
ஊடகங்களிலும் வந்தது, உச்சநீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவுக்கு அரசியல் ஆக்காதீர்கள் என்று கூறியுள்ளது பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக ஒருவர் பேசியதை நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது அவர் மன்னிப்பு கேட்டார்.
தேவைப்பட்டால் நீ பஞ்சாமிர்தம் தயாரிக்க வேண்டுமென நீதிமன்றம் சொன்னது. இதுபோன்ற பிரச்சனைகளின் நோக்கம் வேலையின்மை விலைவாசி உயர்வு போன்றவைகள் தீர்க்கபடவில்லை.
மக்களுடைய கவனத்தை திசை திருப்ப லட்டு கலப்படம் பஞ்சாமிர்தம் கலப்படம் என வகுப்பு வாத சக்திகளும் ஆதரவாக உள்ள சந்திரபாபுநாயுடு போன்றவர்கள் நடத்தும் நாடகம் இது.
வெங்கடாஜலபதி மாட்டுகொழுப்பால் என உடல்நிலைபாதிக்கப்பட்டுள்ளது என எந்த காவல்நிலையத்திலும் அவர் புகார் அளிக்கவில்லை. அரசியல் பித்தலாட்டம் செய்பவர்கள் இது போன்ற காரியங்களை செய்கிறார்கள்.
நிர்மலா சீத்தாராமன் தமது பதவியை பயன்படுத்தி தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூல் செய்துள்ளனர். அமுலாக்கதுறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மோடி தான் ஊழலுக்கு எதிராக பேசுபவர் ஆனால் நிதி அமைச்சர் மோசடி செய்துள்ளார். நீதிமன்றம் உத்தரவின் பேரில் வழக்குபதிவு செய்தும் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது நிர்மலா சீதாராமன் பதவியை ராஜானாமா செய்துவிட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.
அமலாக்கத்துறை பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டது. செந்தில்பாலாஜி குறித்து விசாரிக்க வேண்டியது நீதிமன்றம் தான். உச்சநீதிமன்றம் கூட இவ்வழக்கை தனி நீதிபதி விசாரிக்க வேண்டும் என சொல்லியுள்ளது. அதனை செந்தில் பாலாஜியும் மக்களும் ஏற்க வேண்டும்.
திருமாவளவன் அதிகாரத்தில் பங்கு என கேட்கிறார் என்ற கேள்விக்கு நாங்களும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வரவேண்டுமென சொல்கிறோம் .ஒவ்வொரு கட்சியும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது தான் கருத்து.
ஆட்சிக்கு வருவதன் மூலமாக தான் புதிய சமுதாயத்தை படைக்க முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டு வருகிறது என கூறினார்
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று மாநில அரசுக்கு எதிரான வேலூரில் போராட்டம் நடத்தினார்கள் இதில் நாங்களும் ஆட்சிக்கு வருவோம் என முத்தரசன் கூறி அதிரவைத்தார்.