நாங்க லோக்கலாகவே இருந்து கொள்கிறோமே ப்ளிஸ்!

நாங்க லோக்கலாகவே இருந்து கொள்கிறோமே ப்ளிஸ்!

 கு.அசோக்,

  சோளிங்கர் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், பாமக காங்கிரஸ் அதிமுக அமமுக புரட்சி பாரதம் கட்சியினரும் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

  இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு தேவையான அனைத்து வகையான கட்டமைப்பு உள்ள நிலையில் வருவாயை அதிகரிக்கும் வகையில் அருகில் உள்ள பாண்டியநல்லூர் ஊராட்சி மற்றும் சோமசமுந்தரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளை இணைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

 இதனைக் கண்டித்து பாண்டிய நல்லூர், சோமசமுத்திரம், ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கல்யாணி ரகு ராம்ராஜ் அந்தோணி ஆகிய தலைமையில் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இரு ஊராட்சிகளை சோளிங்கர் நகராட்சியுடன் இணைத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாகவும், வாழ்வாதாரத்தை இழந்து அதிகப்படியான வரியை கட்ட முடியாது என்பதால் அப்பகுதி மக்கள் இரண்டு ஊராட்சிகளை நகராட்சியில் இணைக்கும் திட்டத்தினை தமிழக அரசு  கைவிடக்கோரி கண்டன  எழுப்பி கோஷங்கள் எழுப்பினர்.

   தொடர்ந்து கிராம பொதுமக்களுக்கு ஆதரவாக பாமக ,காங்கிரஸ், அதிமுக, அமமுக, புரட்சி பாரதம் கட்சியினர் ஆதரவளித்தனர்.