சரக்குக்கு கூடுதல் வசூலை தடுத்த பில் வழங்கும் திட்டம்!டாஸ்மாக்கில் அமுல்!

சரக்குக்கு கூடுதல் வசூலை தடுத்த பில் வழங்கும் திட்டம்!டாஸ்மாக்கில் அமுல்!

கு.அசோக்,

  மதுபானம் பாட்டில் மீது கூடுதல் விலை நிர்ணயிப்பதை தடுக்கும் விதமாக பாட்டில்களுக்கு பில் வழங்கும் முறைக்கான சோதனை ஓட்டம் இராணிப்பேட்டை  மாவட்டத்தில் நடைபெற்றது.

 டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் இதற்கான சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இராணிப்பேட்டை மாவட்டத்தில் 83 மதுபான விற்பனை கடைகள் உள்ள நிலையில், தற்போது ஆற்காடு திமிரி வானம்பாடி ரத்தினகிரி இராணிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட ஏழு மதுபானகள் விற்பனை கடைகளில் மதுபான பாட்டிலுக்கு பில் வழங்கும்  சோதனை பணிகளானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  மதுபான பாட்டிலுக்கு பில் வழங்கும் முறை முழுவதுமாக நடைமுறைக்கு வந்தால் கூடுதலான விலைகள் விற்பனை செய்யப்பட்டு வரும் சர்ச்சைகளை போக்கும் என்று கூறப்படுகிறது.

 பில் வழங்குவதில்  ஏதேனும் இடர்பாடுகளை அதற்கான டெக்னீசியன் மூலமாக அறிந்து அதனை முழுமையாக சரி செய்து பின்னர் மாவட்ட முழுவதும் பில் வழங்கும் பணிகளை நடைமுறைப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.