ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள்! தற்கொலை செய்து கொண்ட தாய்! காரணம் என்ன?

ஜி.கே.சேகரன்,
ஒரே பிரசவத்தில் இரண்டு பெண்குழந்தைகளை பெற்றெடுத்த தாய் வேலூர் அரசு மருத்துவமனையில் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சுரேகா (23)இவரது கணவர் விக்னேஷ், இவர்மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
சுரேகா முதல் பிரசவத்திற்காக கடந்த திங்கட்கிழமை வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
இதில் ஒரு குழந்தை நன்றாக உள்ள நிலையில் மற்றொரு பெண் குழந்தை உடல் எடை குறைவாக இருப்பதால் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மற்றொரு மகளை காண முடியவில்லை என வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மருத்துவமனையில் ஐந்தாவது மாடியில் இருந்து சுரேகா கீழே குதித்துள்ளார். உயிருக்கு போராடிய சுரேகா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டது இருப்பினும் சுரேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு குழந்தையை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது பெண் குழந்தை பிறந்ததால், குடுமப்பதினர் ஏதேனும் திட்டினரா? அதனால் தான் இந்த முடிவெடுத்தாரா சுரேகா என மேலும் விசாரித்தால் நலம்.
அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.