வேலூரில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட உள்ளனரா? ஆட்சியரிடம் ஒருசாரார் மனு!

ஜி.கே.சேகரன்

வேலூர் மாவட்டத்தில் இரண்டு ரவுடிகளை போலீசார் என்கவுண்டர் செய்யவிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி பிஎஸ்பி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச்சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

   இந்த கொலைக்கு பின்னர் சென்னைக்கு புதிய காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். அவர்கள் பொறுப் பேற்றார். அவர் பொறுப்பேற்றதும் ரவுடிகளுக்கு அவர்கள் பாஷையில் பாடம் கற்பிக்கப்படும் என்று வெளிப்படையாவே எச்சரித்தார்.

  இந்நிலையில் சென்னையில் திருவேங்கடம், சீஸிங் ராஜா, புதுக்கோட்டையில் திருச்சி ரவுடி துரை உடபட பல என்கவுன்டர்கள் நடந்தது.

 அதே பாணியில் வேலூரில் இரண்டு ரவுடிகளை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்படவிருப்பதாக ஒரு செய்தி பரவிவருகிறது. இத்தனைக்கும் இதில் பேசப்படும் இருவரும் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியை சேர்ந்தவர் வசூர் ராஜா இவர் மீது ஆட் கடத்தல் வழிப்பறி கொலை மிரட்டல் ,கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வசூர் ராஜா கடந்த ஒன்றரை வருடங்களாக கோவை மத்திய சிறையில் உள்ளார்.

 தனது மகன் வசூர் ராஜாவை என்கவுண்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக கருதி அவருடைய தாய் கலைச்செல்வி தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி அவர்களிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

 அதில் கூறப்பட்டிருப்பதாவது.

 சிறையில் உள்ள என் மகன் பலத்த பாதுகாப்புடன் வேலூர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்கு அழைத்துவரப்படுவார். அப்போது அவருடன் உறவினர் யாரும் கூட பேச முடியாதபடி காவல்துறை பாதுகாப்பு இருக்கும்.

 இந்த நிலையில் சத்துவாச்சாரி காவல்துறையினர் வசூர் ராஜா ஆட்கள் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அதனால் தொழிலதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் அதற்கு வசூர் ராஜா தான் காரணம் என கூறி ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர்.

 மேலும் என் மகன் வசூர் ராஜாவை காவல்துறையினர் என் கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  என் மனைவிக்கு குழந்தை குடும்பம் என ஆன பின்னர் அவர் திருந்திவிட்டார்.

 இருந்த போதும், காவல்துறையினர் வசூர் ராஜாவை என் கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதனை தடுக்க வேண்டுமென அந்த புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

 மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இது குறித்து விசாரிக்கிறேன் நீங்க பத்திரமாக போங்க என்று அனுப்பிவைத்தார்.

  வேலூரில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டர் என்கிற செய்தி பரவிய நிலையில், ஒருதரப்பில் ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அப்படின்னா மற்றொருவர் யார்?

 குறிப்பு:-அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள தொழிலதிபரின் பெயர் தங்கராஜ். அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் பல்வேறு செல்வாக்கை பயன்படுத்தி அதை வேறு பக்கத்துக்கு திசைமாற்றிட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

 தங்கராஜ், பழைய கட்டிடங்களை இடித்து கொடுக்கும் தொழிலை சிறப்பாக செய்து வந்தவராம். அப்படி ஒரு கட்டிடத்தை இடித்த போது புதையல் போல கிடைத்ததாக கூறப்படும் பணம் தான் இந்த பிரச்சனைக்கு காரணமாம். அதை மீட்கவே ஒரு Dr.பவர் செக்டார் இப்படி சில ரவுடிகளை ஏவிவிட்டதாக கூறப்படுகிறது.

 தங்கராஜ் இறந்த அன்று அவரது  பாக்கெட்டில் 50,000 பணம் வைத்திருந்ததுடன் மோதிரமும் அணிந்திருந்தாராம். அதையெல்லாம் காணவில்லை என்று சாரதாரணமாக டீக்கடையில் கூடுபவர்களே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இருந்த போதும் அந்த பவர் செக்டாரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரவில்லையாம்.

 இந்நிலையில், இது குறித்த தகவல்களை காவல் துறையின் மேலிடம் வரைக்கும் வேறு பிரிவினர் தட்டி பறக்கவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.