இரண்டரை கோடி லபக்கியவர்களை விரைந்து பிடித்த மதுரை போலிசார்! டி.ஐ.ஜி.பொன்னி பாராட்டு!

இரண்டரை கோடி லபக்கியவர்களை விரைந்து பிடித்த மதுரை போலிசார்! டி.ஐ.ஜி.பொன்னி பாராட்டு!

 கே.ஏ.ஜெகதீஷ்வரி,

  மதுரை மாவட்டம், திருமங்கலம்  தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட, நேசநேரி விலக்கில் நகைக்கடை அதிபரை இரண்டரை கோடி ரூபாயுடன் கடத்திச் சென்ற கும்பலை 9 மணி நேரத்திற்குள் தனிப்படையினரின் பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இந்நிலையில் தனி8ப்படை போலிசாரை டிஐஜி பொன்னி இ.கா.ப.அவர்கள் வெகுவாக பாராட்டினார்.   

இது பற்றின விவரம் வருமாறு,

நேற்று 13.03.2022 ஆம் தேதி மதுரை, அரசரடியில் நந்தினி ஜுவல்லரி என்ற நகைக்கடை நடத்தி வரும் அதன் உரிமையாளர், தர்மராஜ் என்பவர் தன்னுடைய நான்கு சக்கர வாகனத்தில் அதன் ஓட்டுனர் பிரவீன் குமார் வயது 26 மற்றும் நகை கடை ஊழியர் கோவிந்தராஜன் என்பவருடன், நாகர்கோவிலுக்கு நகை வாங்குவது தொடர்பாக  சென்றுள்ளனர். அப்போது அவர் இரண்டரை கோடி பணம் எடுத்துச்சென்றுள்ளார்.

   அப்போது திருமங்கலத்தை அடுத்த நேசநேரி விலக்கில் மேற்படி வாகன ஓட்டுனரும், ஊழியரும் சிறுநீர் கழிப்பதற்காக வாகனத்தை விட்டுச் சென்ற போது அங்கு வந்த இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மேற்படி நகை கடை உரிமையாளரை மிரட்டி காரை எடுத்துச் சென்றுள்ளனர்.

 பின்னர், நகை கடை உரிமையாளர்  தர்மராஜ் அவர்களை சேடபட்டி அருகிலுள்ள அத்திப்பட்டி கிராமத்தில் இறக்கிவிட்டு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

 இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன் காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை செய்து வந்தனர்.

 விசாரணையில் மேற்படி எதிரிகள் கடை உரிமையாளரிடம் இருந்த அவருடைய செல்போன், அவர் அணிந்திருந்த மோதிரம் மற்றும்  பணத்தையும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேலும்  வாகன ஓட்டுனர் பிரவீன் குமார் என்பவரின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

 அவரை பிடித்து கவனித்த போலிசார் உண்மையை வரவழைத்தனர்.

 தன்னுடைய உரிமையாளருடன் பணம் கொண்டு செல்வதை தன்னுடைய நண்பர்களான மொட்டை மலையை  சேர்ந்த அருண்குமார் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இந்த மூவரும் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி உள்ளனர்.

  அவர்கள் திட்டம் தீட்டியபடி அதன் ஓட்டுநர் பிரவீன்குமார் சிறுநீர் கழிப்பதற்காக நேசநேரி விலக்கில் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த எதிரிகள் இருவரும் மேற்படி காருடன் உரிமையாளர் தர்மராஜ் என்பவரை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் எதிரிகள் இருவரும் உரிமையாளரை எழுமலை அருகே இறக்கி விட்டு ஒரு கேப் மூலம் அங்கிருந்து பெரியகுளம் சென்று பின்னர் கேபை -விட்டு பஸ்ஸில் சென்று கொள்ளையடித்த பணத்துடன் திண்டுக்கல்லில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து தங்கியுள்ளனர்.

 இந்த விவரங்களை அறிந்த தனிப் படையினர் விரைந்து சென்று லாட்ஜில் தங்கியிருந்த மேற்படி எதிரிகள் அருண்குமார் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோரை கைது செய்து, அவர்கள் கொள்ளையடித்த பணத்தையும் கைப்பற்றி திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

  இவ்வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் இரண்டரை கோடி உரிமையாளர் தர்மராஜ் அணிந்திருந்த தங்க மோதிரம் செல்போன் ஆகியவற்றையும் எதிரியிடம் இருந்து கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரவீன்குமார், அருண்குமார் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

 இவ்வழக்கில் விரைவாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்தும், கொள்ளையடிக் கப்பட்ட பணத்தையும் கைப்பற்றிய, தனிப்படையினரை, மதுரை சரக காவல் துணை தலைவர் பொன்னி இ.கா.ப.  மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெகுவாக பாராட்டினார்.