பணம் கொடுக்கல் வாங்களில் விபரீதம்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஒருவா ¢உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (45) இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார்.
இவர் அம்பலுர் பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கும் இவரது உறவினர் ரஜினி என்பவருக்கு நிலம் விற்பனை செய்ததில் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தாக தெரிகிறது.
அதன் பின்னர் சங்கரின் சகோதரர்கள் ரவி மற்றும் சந்திரசேகர் அந்த நிலத்தை வாங்கியதற்கு ஏன் எங்களிடம் கேட்கவில்லை என்று ரஜனியிடம் கேட்டுள்ளனர்.
பின்னர் சங்கர் ரஜினியிடம் பணம் கேட்க சென்ற போது உங்கள் சகோதரர்களை அழைத்து வரும்படியும் அவர்கள் முன்னிலையில் பணம் கொடுப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் சங்கர் ரஜினியின் கடை முன்பு பணம் கேட்க சென்ற போது ரஜினி மீண்டும் சகோதரர்களை அழைத்து வரும்படி கூறியதால் விரக்தியடைந்த சங்கர் தான் கையில் எடுத்து சென்ற பெட்ரோலை ஊற்றி கொண்டு தீயிட்டு கொண்டார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது அம்பலூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்