ஏ.டி.எம் கொள்ளை ஒரே நாளில் ஏழு கொலை தமிழகத்தில் பதற்றம்! ஆறு போலிசார் மாற்றம்!

ஏ.டி.எம் கொள்ளை ஒரே நாளில் ஏழு கொலை தமிழகத்தில் பதற்றம்! ஆறு போலிசார் மாற்றம்!

 ஜெ.அருண் ஹென்றிக்ஸ்,

 தமிழகத்தில் 7 ஏ.டி.எம்.மிஷின்களில் பணம் கொல்லை, கோவை உட்பட ஒரே நாளில் ஏழு கொலை  நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது, இதனால் ஆறு போலிசார் ஆயுதப்படைக்கு மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்கள்

  கோவையில் நீதிமன்றம் பின்புறம் உள்ள கோபாலபுரம் பகுதியில் ஐந்து நபர்கள் சேர்ந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் இருவரை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

 பட்ட பகலில் நடந்த இந்த கொலையைப்போல் ஒரே நாளில் 7 கொலைகள் நடத்தப்பட்டிருக்கிறது.

 அதே போல் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையில்,  மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம், தேனிமலை பகுதி போளூர் பஸ் நிலையம் மற்றும் கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்து தப்பினர்.இந்த 4 ஏடிஎம் மையங்களில் இருந்தும் ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.

   தமிழக போலிசாரை உசுப்பிய இந்த கொள்ளை தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விஜயவாடா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

 இந்நிலையில், ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அன்று இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத திருவண்ணாமலை நகர காவல் உதவி ஆய்வாளர் மோகன், காவலர் வரதராஜன், போளூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, தலைமை காவலர் அருள், கலசப்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பலராமன் மற்றும் காவலர் சுதாகர் ஆகியோர்  திருவண்ணாமலை மாவட்ட ஆயுதபடை பணிக்கு பணியிடை மாற்றம் செய்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் உத்தரவு பிறப்பித்தார்.

  பெரிய தண்டனை தான்!!