குடிபோதையில் கொலை!

குடிபோதையில் கொலை!

கு.அசோக், 

குடிபோதையில் தாய் மற்றும் மனைவியிடம் தகராறு, தட்டி கேட்ட தம்பியை கத்தியால் குத்த வந்த அண்ணன்- புடவை  மற்றும் கயிற்றில் கழுத்தில் இறுக்கி கொலை செய்த தம்பி கைது போலீசார் விசாரணை.

   வேலூர்மாவட்டம்,வேலூர் சலவன்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவர் படக்கடை வைத்துள்ளா.ர் இவரின்  மகன்  மோகன் இவர் வேலைக்கு செல்லாமல் மதுபோதையில்  எப்போதும் வந்து வீட்டில் தகராறில்  ஈடுபடுவது வழக்கம்.

  அதேபோல் சம்பவதன்றும் மதுபோதையில் தாய் மற்றும் மனைவியை தாக்கியுள்ளார்.இதனை தடுக்க சென்ற தம்பி அண்ணனிடம் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கத்தியால் குத்த வந்துள்ளா£ அண்ணன் மோகன்.

 இதனால் ஆத்திரமடைந்த தம்பி பாஸ்கர் அங்கு இருந்த புடவை மற்றும் கயிற்றால் மோகனின் கழுத்தை இறுக்கி உள்ளார்.

  அதில் சம்பவ இடத்திலேயே அண்ணன் மோகன் உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் துறையினர் இறந்த மோகனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் மோகன் இறந்ததை குறித்து விசாரணை மேற்கொண்டதில் அண்ணனை கொலை செய்து தம்பி பாஸ்கர் என்பது உறுதியான நிலையில் பாஸ்கரன் மீது வழக்கு பதிந்து  அவரை கைது செய்தனர்.