தளவாய் சுந்தரத்துக்கு தலாக் கொடுத்த அதிமுக! காவிக்கொடி காரணமா?

ம.பா.கெஜராஜ்,
கன்னியாகுமரியின் சட்டமன்ற உறுப்பினரான தளவாய் சுந்தரத்தை மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்தும், அமைப்பு செயலர் பொறுப்பிலிருந்தும் கட்சி தலைமை நீக்கியிருக்கிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தளவாய் சுந்தரம்¢ கொடியசைத்து தொடங்கி வைத்த காரணத்துக்காக அவரை அதிமுகவிலிருந்து நீக்கியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்டங்களில் ஊர்வலம் நடைபெற்றது. கிழக்கு மாவட்டத்தில் ஈசாந்திமங்கலத்தில் நடைப்பெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை கன்னியாகுமரி எம் .எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அந்த காரணத்துக்காகவே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாராம்.
இது குறித்து அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் ஊர்வலத்தை அவர் தொடங்கி வைத்திருக்கிறார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தளவாய் ஏற்கனவே பங்கேற்றார். அதற்கு அப்போது கட்சி தலைமை கண்டிக்கவில்லை.
ஆனால் இப்போது நடவடிக்கை எடுத்திருப்பது வருத்தமளிக்கிறது என்றுதெரிவிக்கிறார்கள்.
இது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவல்ல, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தளவாய் சுந்தரத்தின் பரிந்துரையின் பேரில் சீட்டு கொடுக்கப்பட்ட பசலியான் என்பவர் நான்காம் இடத்தை பெற்றாராம்.
இத்தனைக்கும் இத்தொகுதியில் 2 லட்சத்துக்கும் அதிகமான மீனவர் வாக்குகளை பெறும் நோக்கத்தில் அச்சமூகத்தை சேர்ந்த பசலியான் என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்த தளவாய் சுந்தரம் பரிந்துரை செய்திருந்தார். இவையெல்லாம் சேர்ந்துதான் இந்த நீக்க முடிவாம்.
கோஷ்டி கானம்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் தளவாய் சுந்தரம் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் பச்சைமால், எஸ்.ஏ.அசோகன் தலைமையிலும் இரு கோஷ்டிகளாக அதிமுக செயல்பட்டு வருவது கட்சி தலைமையும் அறியும்.
இந்நிலையில் தளவாய் சுந்தரம் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்த விவகாரத்தை அவரது எதிர் பறக்கவிட்டு சாதித்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவில் தளவாய் சுந்தரம் முக்கிய ஆளுமை. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். 2016 சட்டப்பேரவை தேர்தலில் குமரி மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் அதிமுக வெற்றிபெறாத நிலையில் தளவாய் சுந்தரத்துக்கு தமிழக அரசின் டில்லி பிரதிநிதி என்ற பொறுப்பை பழனிசாமி வழங்கி அழகு பார்த்திருந்தார்.
தென்மாவட்டங்களில் பழனிசாமி பங்கேற்கும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் தளவாய் சுந்தரம் ஆஜராகிவிடுவார். இந்நிலையில்தான் அவரிடமிருந்த கட்சி பதவிகள் பறிக்கப்பட்டிருக்கிறது.