அதிமுக போராட்டத்தில் கவனம் பெற்ற முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி!

கு.அசோக்,
சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம்,
திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூரில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு அண்ணாதிராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் வீரமணி தலைமையில், சுமார் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து, சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வை கண்டித்துகண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
அப்போது முன்னாள் அமைச்சர் வீரமணி கோஷ முழக்கத்தை சொல்லி அங்கும் இங்கும் சென்று மனித சங்கிலியில் கலந்து கொண்ட சக கட்சியினரை உறசாகப்படுத்தினார்.
அதே போல் புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. இதில் திருப்பத்தூர் நகரம்,திருப்பத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் மற்றும் கந்திலி கிழக்கு,மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பதாகை ஏந்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம்,
திமுக அரசை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேலூரில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம்,வேலூர் கோட்டை அருகே உள்ள காந்தி சிலை அருகில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் கே அப்பு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான அரசைக் கண்டித்தும், மேலும் தற்போது உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு, சொத்து வரி, வீட்டு வரி அத்தியா வசிய பொருட்களின் விலைவாசி உயர்வு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதே போன்று வேலப்பாடி,சாய்நாதபுரம் போன்ற பகுதிகளிலும் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் செய்தனர் இதில் மாமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம்
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரம், அதிமுக சார்பில் அரசை கண்டித்தும், சோளிங்கர் நகராட்சி சீர்கேட்டை கண்டித்தும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் கலந்து கொண்டு விலைவாசி ஏற்றம் , சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கட்டுப்படுத்தாத அரசை கண்டிப்பதாகவும், சோளிங்கர் நகராட்சி சீர்கேட்டையும், வரி உயர்வை கண்டித்து பேசினார்.
இதில் 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து மனித சங்கிலி போராட்ட ஈடுபட்டு அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் நகர செயலாளர் வாசு, ஒன்றிய செயலாளர்கள், விஜயன் பெல்.கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் ராமு உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.