பெண்காவலர்களுக்கு கோட்டை அகழியில் பயிற்சி!

பெண்காவலர்களுக்கு கோட்டை அகழியில் பயிற்சி!

கு.அசோக்,

 கோட்டை அகழியில், பெண்காவலர்கள் உட்பட 53 காவலர்களுக்கு  பேரிடர் கால பயிற்சி அளிக்கப்பட்டது.

  வேலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பாதிப்புகள் ஏற்படும் போது பொது மக்களை எவ்வாறு மீட்பது தொடர்பாக ஆயுதப்படை காவலர்கள், பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 53 காவலர்களுக்கு பேரிடர் கால பயிற்சி கோட்டை அகழியில் நடைபெற்றது.

   இதில் பேரிடர் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ரப்பர் விசை படகுகளை இயக்குதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, மரம் வெட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.