இவங்க திருந்தவே மாட்டார்களா! பேனர் கலாச்சாரத்தை விடவும்மாட்டார்களா?

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே அதிமுக பிளக்ஸ் பேனர் அகற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு உமராபாத் காவல்துறையினர் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் அதிமுக மாநிலங்களை உறுப்பினரும், அதிமுக கொள்கை பரப்புச்செயலாளருமான தம்பிதுரை உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து, செயல்வீரர்கள் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் அகற்றும் பணியில், அயித்தம்பட்டு பகுதியை சேர்ந்த வாசு என்ற கூலித்தொழிலாளி ஈடுப்பட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராவிதமாக அப்பகுதியில் இருந்த டிரான்ஸ் பார்மர் மீது பேனர் உரசியுள்ளது, அதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே வாசு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறபோது அதையெல்லாம் உள்ளூர் அதிகாரிகளும் கண்டுக் கொள்வதில்லை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தெனாவட்டாக செயல்படுகின்றனர். இதனால் அவ்வப்பொழுது இப்படிப்பட்ட பலிகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பது வேதனையே.
அரசியல் கட்சின்னாலே "பிரேக் தி ரூல்" தான் போலிருக்கு.