ஏரியில் கழிவுநீர் அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு!

கு.அசோக்,
காட்பாடி வட்டம்,வன்றந்தாங்கல் ஏரி கழிவுநீர் முழுவதுமாக தேக்கி வைத்ததை அப்புறப்படுத்தி மழைநீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால் ஏரியில் மழைநீரை தேக்க மாவட்ட ஆட்சியரிடம் இளங்கோவன் என்பவர் மனு அளித்தார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
வேலூர்மாவட்டம், காட்பாடி பகுதியில் வன்றந்தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மதகுகளை முழுமையாக மூடபட்டுவிட்டது.
ஆகவே கல்புதூர், செங்குட்டை,ராஜீவ்காந்தி நகர் வன்றந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் உள்ள கழிவுநீர் அனைத்தையும் கால்வாயில் கொட்டுவதால் அவை ஏரியில் கலந்துவிடுகிறது.
இதனால் ஏரியில் கழிவு நீர் தேங்கி, சுற்றுசூழல் பாதிப்படைவதுடன் நிலத்தடி நீர் முற்றிலுமாக சுற்றுவட்டார பகுதிகளில் மாசடைந்து விவசாயமும் பாதிகபடுகிறது.
எனவே அரசு உடனடியாக கழிவுநீரை அப்புறப்படுத்தி ஏரியை பழையபடி நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதே போல் பல ஏரிகள் பாழ்படுத்துப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் இருக்கின்றன. இது நீர்வளத்துறை அமைச்சரின் தொகுதியாகும்.