விமான சாகச நிகழ்ச்சி வருந்தத்தக்கது ப.சிதம்பரம்! பதில் சொல்லாமல் நகர்ந்த நிர்மலா சீதாராமன்!

ம. முருகன்,
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை செல்வதற்காக மதியம் திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்கள், சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி பார்க்கச் சென்ற கூட்டத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தது குறித்து கேட்டபோது, பேட்டியை தவிர்த்துவிட்டுச் சென்றார்.
அதன்பின் சிறிது நேரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் திருச்சி விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறூகையில், சென்னையில் விமான சாகச நிகழ்வின் போது ஐந்து பேர் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. பத்திரிகைகளில் வந்த செய்தியை தான் நான் பார்த்தேன். என்ன காரணம் என தெரியவில்லை. ஆனால் வருந்தத்தக்கது, துரதிர்ஷ்டவசமானது" என்றார்.