தமிழக தேர்தலில் தெலுங்கில் வேட்பாளர்கள் பெயர்!
Candidates name by telngu

ஜி.கே.சேகரன்,
நாடாளுமன்ற தேர்தல் நாளை 19.04.2024 தமிழகத்தில் நடைப்பெறவுள்ள நிலையில், வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வாக்கு மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழக தேர்தலில் வாக்கு இயந்திரங்களில் தெலுங்கு மொழியிலும் வேட்பாளர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம்,
ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 247 வாக்கு சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அந்தந்த வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
இந்த பணியில் காவலர்கள் வருவாய்துறையினர் நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தவர்.
ராணிப்பேட்டைமாவட்டம்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1,699 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட், விவி பேட் மற்றும் தேர்தலுக்கு தேவையான 21 வகையான பொருட்கள் ஆகியவை அந்தந்த வாக்குச்சாவடி
மையங்களுக்கு அனுப்பி வைக்கும் மும்முரமாக
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், அதிமுக வேட்பாளர் விஜயன் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பாண்டியன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் மற்றும் வேலூர் மாவட்டத்தை சார்ந்த காட்பாடி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருத்தணி என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கப்படுகிறது..
இந்த 6 சட்டமன்ற தொகுதியிலும் மொத்தம் 1,699 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அரக்கோணம், திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருப்பதால் வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கண் பார்வை அற்றவர்கள் சுலபமாக சின்னத்தை தேடுவதற்காக வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஓரம் பிரெய்லி முறையில் சின்னங்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது தேர்தல் நாளில் பயன்படுத்தப்படும் அழியாத மை, பேனா, கவர் உள்ளிட்ட வகையான 21 வகையான பொருட்களும் சாக்கு பையில் போட்டு அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அனுப்பும் பணி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்,
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி அவர்களை தேர்தல் பணிக்கு அனுப்பினர் .
வேலூர்மாவட்டம்,வேலூரில் தனபாக்கியம் மகளிர் கல்லூரியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குசாவடி அலுவலர்களுக்கான பணி ஆணை குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரித்து இன்று பணி ஆணை வழங்கி அந்தந்த பகுதியின் வாக்குசாவடிகளுக்கு பொருட்கள் அனுப்பும் வாகனத்தில் அதிகாரிகளையும் அனுப்பி வைத்தனர்.
.