நாட்றம்பள்ளி லிமிட்டில் இருந்து மணல் கடத்தல் !பொங்கி எழுந்த ஜோலார்பேட்டை லிமிட்!

கு.அசோக்,
மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் மேலும் டிப்பர் லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் இன்று சந்தைகோடியூர் பகுதியில் திருப்பத்தூர் வாணியம்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி போலிசார் சோதனை செய்ததில் அனுமதி இன்றி மணல் கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வாகனத்தில் இருந்த டிப்பர் லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை ஆகிய இருவரையும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை செய்ததில் டிப்பர் லாரி டிரைவர் நாட்றம்பள்ளி அருகே ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் 20 மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் திருப்பத்தூர் அடுத்த சின்னகுனிச்சி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் 45 என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அனுமதி இன்றி மணல் கடத்தியதாக வழக்கு பதிவு செய்து கோடீஸ்வரன் உள்ளிட்ட இதுவரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இவரிடமிருந்து டிப்பர் லாரி பறிமுதல் செய்தனர் மேலும் இது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாட்றம்பள்ளி பகுதிகளில் பல இடங்களில் இவ்விதமாக திருட்டுத்தனமாக மணல் கடத்தும் தொழில் ஜருவராக நடந்து வருகிறது. இதற்கு அந்த பகுதிக்கு உட்பட்ட காவல் அதிகாரிகள் சிலர் மாமுலாக வழி வகை செய்து வருகிறார்களாம்.
நீங்க மட்டும் வாங்கிக் கொள்கிறீர்கள் அப்படி என்றால் எங்களுக்கு....? என்று கேட்டு தான் இந்த இந்த அதிரடி நடவடிக்கையாம்.