திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிளேடு பக்கிரி! 40 சவரன் நகை அபேஸ்!
கே.ஏ.ஜெகதீஸ்வரி,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் மர்ம நபர் ஒருவர் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் பிளேடு போட்டு 40 பவுன் நகையை திருடிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டான்.
பக்தி பரவசத்தில் க்யூவில் நின்ற பக்தைகள், நகை பறிபோனதை தாமதமாக அறிந்த நிலையில் போலிசாரின் உதவியை நாடினர்.
இது குறித்து சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போலிசார், வெறும் உடம்போடு வாயில் பிளேடை வைப்பதும் பின்னர் அதை கையில் எடுத்து நோட்டம் விட்ட ஒருவனை குறிவைத்திருக்கிறார்கள்.
மேலும் அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு மேற்கண்ட பிளேடு பக்கிரிக்கு வலை வீசியிருக்கிறார்கள்.
இவனை பற்றி யாருக்கும் தகவல் தெரிந்தால் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அறிவிப்பும் செய்துள்ளனர்.