ஆயிரம் கோடியை மூடிமறைத்த சரவணா ஸ்டோர்ஸ்!
க.முகில்,
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 12 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் , 1000 கோடி ரூபாய்க்கும் மேலான விற்பனையை கணக்கு காண்பிக்காமல் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் கடந்த 1 ம் தேதி முதல் வருமானவரித் துறையினர் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் , சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான 12 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனை நான்கு நாள்களுக்கு நீடித்தது. வருமான வரித்துறை சோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த சோதனை குறித்து
மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சோதனை நிறைவடைந்த இடங்களில் அதிக அளவு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதன்மூலம் வந்த பணத்தினை தங்கம் , பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கின்றன.
மேலும் சரவணா செல்வரத்னம் குழுமம் சோதனையிலிருந்து 1000 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையை மறைத்து மோசடி செய்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால தான் கம்மியா விக்கிறாங்களோ என்னவோ?