அழகிகளின் குத்தாட்டம்!! மாந்தோப்புகளில் சூதாட்டம்! டூ வீலரில் பயணித்து சுற்றிவளைத்த ஐ.பி.எஸ். ஆபிசர் டீம்!

ம.பா.கெஜராஜ்,
உள்ளூர் போலிசார் ஒரு பக்கம் இருக்க, தனிப்படை போலிஸ் அதிகாரிகள் டீம் பெரிய சூதாட்ட பிசினஸ் உரிமையாளர் உட்பட 17 பேர்களை கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ரூ 52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேம்பாலத்தில் சொகுசு காரில் சென்றுக்கொண்டிருந்த ஞானசேகரன் என்கிற பைனான்சியரை ஒரு கும்பல் வழிமறித்து சினிமா பாணியில் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இளையராஜா என்கிற பிரபாகரன் நடத்தும் சூதாட்ட பிசினஸ் தான் இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணம் என பின்னர் தெரியவந்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சப்டிவிஷனுக்குட்பட்ட பூங்குலம் பகுதி மாந்தோப்புகளில் மேற்படி இளையராஜா சூதாட்ட பிசினஸ் நடத்துகிறார். அவர் நடத்தும் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி விளையாடப்படும். அதற்காக ஆந்திரா கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து செல்வந்தர்கள் வருகிறார்கள்.
அப்படி வருபவர்கள் ஒருவேளை வெற்றி பெற்றால் அவர்களுக்கும் பணம் அளிக்கப்படும், விருந்து மற்றும் அழகிகள் நடனமும் நடத்தப்படுமாம். ஆனால் பணம் எடுத்துக்கொண்டு அவர் ஊர் போய் சேர முடியாது, சூதாட்டம் நடத்துபவர்களின் அடியாட்கள் போலிஸ் வேடத்திலோ அல்லது போலிசாரின் உதவியுடனேவோ ஜெயித்து பணம் எடுத்துக்கொண்டு போவோரை மடக்கி பணத்தை பறித்துவிடுவார்கள்.
அந்த வகையில் தான் மேற்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஞானசேகரன் என்பவரை மடக்கி அவரிடமிருந்து 25 லட்சம் ரூபாவை வாணியம்பாடியில் பிடுங்கி சென்றனர்.
சினிமா பாணியில் நடந்த அந்த கொள்ளைக்கு குடியாத்தம் பூங்குலம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்கிற பிரபாகரன் தான் காரணம்.
இந்நிலையில் அப்போதைய வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, இ.கா.ப. அவர்கள் துரிதமாக குற்றவாளிகளை கைது செய்ததுடன், மாந்தோப்புகளில் சூதாட்டம் நடக்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகாரிகள் மாற்றம் நடந்த பின்னர், உள்ளூர் அதிகாரிகளின் துணையுடன் சூதாட்ட பிசினஸிம், அழகிகள் நடனமும் சிறப்பாக நடைபெற்று வந்தன.பணம் கோடிகணக்காக புரண்டது, பல தரப்பினர் கவனிக்கப்பட்டனர்.
இது குறித்த ரகசிய தகவல் காவல் துறை உள் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றன.
அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் கண்ணன் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப. மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் நெ.மணிவண்ணன் ஆகியோர் தனிப்படை ஒன்றை ரகசியமாக அமைத்தனர்.
அதன் பேரில் ஏ.எஸ்.பி பிரசன்ன குமார் தலைமையில் ரகசிய டீம், குடியாத்தம் சப்டிவிஷன் அதிகாரிகளுக்கும் தெரியாமல் அப்பகுதியில் அசெம்ப்ளி ஆனார்கள், பின்னர் திடீரென்று பூங்குலம் மாந்தோப்புக்குள் டூவீலர்களில் புகுந்தனர்.
இந்த பகுதி குடியாத்தம் அருகே தமிழக ஆந்திர எல்லையோரம் சைனகுண்டா சோதனை சாவடி அருகே மலை அடிவாரத்தில் உள்ளது.
அப்பொழுது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 17 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர் மேலும் அவர்களிடமிருந்து கட்டு கட்டாக 52 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 15 செல்போன்கள் மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஆனால் பெரும் பணத்துடன் ஒரு கும்பல் தப்பியோடிவிட்டது. அவர்கள் மூட்டைகளில் பணத்தை அள்ளி சென்றுள்ளார்கள். அவை சுமார் இரண்டு கோடி ரூபாய் இருக்கும் என்று மதிபிடப்படுகிறது. அந்த வகையில் 15க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்
மேலும் கைது செய்யப்பட்ட 17 பேரும் குடியாத்தம் தாலுகா போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் ஜூவல்லரி ஷாப் ஒன்றிலிருந்து பணம் எண்ணும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு, சூதாட்டக்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்த பணத்தை போலிசார் எண்ணிய போது அதில் 52 லட்சத்து 41 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது.
இது குறித்து மேலும் சில தகவல்களை சேகரித்த போது, பல பேர் பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அடமானம் வைத்து சூதாடி சொத்துக்களை கோடிகணக்காக பணம் இழந்துள்ளனர். இது தொடர்பாக புகார்கள் தெரிவித்தும் கூட போலிசார் நடவடிக்கை எடுப்பதில்லையாம்.
ஆகவே தான் உயர் போலிசார் மேற்பார்வையில் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பயிற்சி டாக்டர் பிரசன்னகுமார் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகன்நாதன்,ராஜசேகரன், பாஸ்கர் உள்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் அடுத்த சைனகுண்டாவிலிருந்து மொகிலிக்கு செல்லும் வழியில் கொண்டம்மா கோயில் அருகே உள்ள ஒரு மாந்தோப்புக்குள் நேற்று மாலை திடீரென நுழைந்து அங்கு சூதாடும் கும்பலை சுற்றி வளைத்தனர்.
இது தொடர்பாக குடியாத்தம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அங்கு சூதாடிய குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்கிற பிரபாகரன், (ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர்), கிருஷ்ணகிரி சேர்ந்த சீனிவாசன், ஆற்காடு சேர்ந்த பாரதி,சென்னையைச் சேர்ந்த பாஸ்கர்,சேட்டு, திருப்பத்தூரைச் சேர்ந்த வெற்றிவேல், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கார்த்தி,உபேந்திரன், பெங்களூரைச் சேர்ந்த ரவிக்குமார், ராஜி, முனிராஜ் ஸ்ரீதர்குமார்,ஜிதேந்திர குமார் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் லாட்டரி பிசினசில் கொடிகட்டி பறக்கும் குடியாத்தம் முதலாளிகள் மீதும் உயர் போலிஸ் அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்கனும் என்கிறார்கள் பொதுமக்கள்.
நேற்று நடந்த ரைடுக்கு முன்னர் இளையராஜா அவரது சூதாட்ட பிசினஸை பூங்கலம் தோப்புகளில் தான் நடத்தி வருவாராம். ஆனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவரது பிசினஸ் ஸ்பாட்டை மாற்றினாராம்? அதனால் அந்த இடம் ராசியில்லையாம்.
குறிப்பு:- மேற்படி சூதாட்டம் பிசினஸ் உரிமையாளர் இளையராஜாவுக்கு ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏஜென்ட்கள் உள்ளன இதில் முக்கிய ஏஜென்ட் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்கிறார்கள்.
மேலும் இளையராஜா நடத்தும் சூதாட்ட தோப்புகளை அக்கம் பக்கத்தினர் எவரும் ஸ்பெஷல் டீமுக்கு காட்டிக் கொடுப்பதில்லையாம். அந்த அளவுக்கு கவனிப்பு அதிகமாம் முக்கியமாக கோவில் திருவிழாக்கள் என்றால் இவர்தான் முதலீடு செய்வாராம்
அது சரி?!