அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காவலர், ஆயுதப்படைக்கு மாற்றம்!

அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காவலர், ஆயுதப்படைக்கு மாற்றம்!

 உ.சசிகுமார்,

அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காவலர், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

'பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவர் கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு சென்றார்.

. கூடலூரில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, அன்று மாலையில் உதகைக்கு வந்து, சேரிங்கிராஸ் பகுதியிலிருந்து ஏ.டி.சி. நோக்கி நடைபயணம் மேற்கொண்டபோது, உதகை காஃபிஹவுஸ் சதுக்கத்தில் பணியிலிருந்த 'ஹில் காப்' காவலர் கணேசன் அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 அண்ணாமலையுடன் அவர் சீருடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியான நிலையில் காவலர் கணேசனை ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்.பி. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.