சொந்த ஊரில் எஸ்கேப் ஆன எச்.ராஜா? விரட்டப்பட்டதால் விரக்தி!!

சொந்த ஊரில் எஸ்கேப் ஆன எச்.ராஜா? விரட்டப்பட்டதால் விரக்தி!!

 ம.டெல்லிராஜன்,

  பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை தரக்குறைவாக பேசுவது; மத ரீதியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி வருபவர் எச்.ராசா.

 இவர் மீது ஏராளமான வழக்குகள் காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன.

   எச். ராஜா தனது 66-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதனிடையே, அவரது சொந்த ஊரான சிவகங்கையில் உள்ள திருபுவனத்தில் பாஜக நிர்வாகிகள் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    அதில் பங்கேற்க சென்றார் ராஜா. அப்போது அங்கு வந்த பாஜக ஒன்றிய தலைவர் மோடி பிரபாகரன், எச். ராஜாவின் காரை திடீரென மறித்தார். பின்னர், கோயிலில் நடக்கவிருந்த சிறப்பு பூஜைகளுக்கு எதற்கு தன்னை அழைக்கவில்லை என்று கேட்டு எச்.ராஜாவிடம் சரமாரியாக கேள்வியெழுப்பினார்.

   அப்போது அவரது ஆதரவாளர்கள் எச். ராஜா காரை முற்றுகையிட்டனர். இதையடுத்து, எச். ராஜாவின் ஆதரவாளர்கள் அங்கு வந்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எச். ராஜா அங்கிருந்த ஒரு நிர்வாகியை நீயெல்லாம் கட்சிக்கு என்ன பண்ணிருக்க? என்று கேள்வி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நிர்வாகி, தான் செய்த பணிகளை எல்லாம் சத்தமாக கூறி, இதையெல்லாம் வேறு யார் செய்தது? நீங்களா செய்தது? என்று கேள்வியெழுப்பினார்.

  அதை சமாளிக்க முடியாத எச்.ராஜா அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.