ஓரவஞ்சனை செய்கிறார் ஆயர்! குடியாத்தம் சர்ச் மக்கள் புலம்பல்!

ஓரவஞ்சனை செய்கிறார் ஆயர்! குடியாத்தம் சர்ச் மக்கள் புலம்பல்!

ஜி.சாந்தகுமார்,

 சபை அங்கத்தினர்களை சரிசமமாக பாவிக்கக்கூடிய இடத்திலுள்ள ஆயர் ஓரவஞ்சனை செய்கிறார், குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார், இதனால் விசாரணை பாதிக்குமே என்று சர்ச் மக்கள் புலம்புகிறார்கள்.

  இந்த கூத்தெல்லாம் குடியாத்தம் சி.எஸ்.ஐ. திருச்சபையில் தான் நடந்து வருகிறது.

இது பற்றின விவரம் வருமாறு,

 கடந்த ஞாயிறு என்று மேற்படி திருச்சபையில் நடைபெற்ற ஆலய காரிய கமிட்டி தேர்தலில் இரண்டு குழுக்களைச் சேர்ந்த  ஐந்து, ஐந்து பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  இந்த சூழலில் அந்த ஆலயத்தின் ஆயராக உள்ளவர் ஒரு வாக்களிக்க வேண்டும். அப்படியிருக்கையில், அந்த ஆயர் ஏற்கனவே போலிசில் முறைகேடு புகார் அளிக்கப்பட்டிருக்கும், நபர்கள் அடங்கிய குழுவுக்கு அவரது வாக்கை செலுத்தி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்.

  இந்நிலையில் பணம் கையாடல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களை ஆயர் அவர்கள் ஊக்குவித்துள்ளார் என்பது புலப்படுகிறது.

  அப்படியிருக்க நாளைய தினத்தில் நடைபெற உள்ள செயலர் பொருளர் தேர்வில் குற்றம் சாட்டப்பட்ட இருவருமே அதாவது உண்டியல் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த இருவருமே மீண்டும் பதவிக்கு வர ஆயர் உதவி செய்து வருகிறார்.

   மேற்படி குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு பதவி கொடுத்தால், அவர்கள் மீது வரும் போலீஸ் விசாரணையானது சரியான பாதையில் செல்ல முடியாது.

  ஆகவே வேறு யாராவது செயலர் பொருளர் பதவிக்கு வரும்போது போலீஸ் விசாரணை சரியானதாக இருக்கும்.

 இந்த சாதாரண விஷயத்தைக்கூட புரிந்துக் கொள்ளாத ஆயர் விசாரணை வலையில் இருக்கும் இவர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.

    இவர் இவ்வாறு செய்வதற்கு, உள்நோக்கம் ஏதும் இருக்குமோ என்று சபையோர் அய்யப்படுகிறார்கள்.