பச்சிளம் பயிரை அழித்த அரக்க அதிகாரிகள்!

கு.பிரணேஷ்
பச்சிளம் பயிரை அரக்கதனாக அழித்த அரசு அதிகாரிகளை பலரும் சபித்துக் கொட்டினார்கள்.
சோளிங்கர் அடுத்த மருதாலத்தில் 5 சென்ட் புறம்போக்கு நிலத்தில் பயிரிட்டிருந்த பச்சிளம் நெற்பயிர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் டிராக்டர் மூலம் அழித்து அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் விவசாயிகளின் நெஞ்சங்களின் சோகத்தையும் கண்ணீரையும் ஏற்படுத்தியுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம்
சோளிங்கரை அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவர் அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிட்டு வருகிறார். மேலும் அதற்கான நிலவரிமுறையாக செலுத்தி பராமரித்து வந்துள்ளார். தற்போது அந்த நிலத்தில் நெல் நாற்று நட்டுள்ளார்.
இந்நிலையில் பயிர்கள் அனைத்தும் பச்சைக்கட்டி பால்கதிர் விட்டு தொண்டை பயிர்களாக இருந்த சூழலில் திடீரென அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் நாகராஜனிடம் இந்த இடத்தில் இருளர்களுக்கு குடியிருப்பு அமைப்பதற்கு இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நிலத்தில் டிராக்டரை இறக்கி பயிர்களை அழித்தனர்.
விவசாயி நீண்ட ஆண்டுகளாக தங்களுடைய வியர்வை சிந்தி வளர்த்த பச்சிளம் பயிர்களை வருவாய் துறை அதிகாரிகள் எந்த ஒரு பாரபட்சம் இன்றி அழித்து நாசம் செய்து அடாவடியில் ஈடுபட்டனர்
இதை எதிர்பாராத விவசாயி செய்வதறியாது திகைத்து கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் அறுவடையை முடித்ததும் நிலத்தை ஒப்படைப்பதாக கூறியும் அதிகாரிகள் அவருடைய பதிலை எதிர்பார்க்காமல் பச்சிள நெற்பயிர்களை அழித்து நாசம் செய்தனர்.
தொடர்ந்து அதிகாரிகளின் இரக்கமற்ற இச்செயலை கண்ட அப்பகுதி விவசாயிகள் பிள்ளைகளை போல பயிர்களை பாதுகாத்து வரும் எங்கள் கண் முன்பே அதிகாரிகள் அரக்க குணம் கொண்டு பச்சிளம் நெற்பயிர்களை அழித்தது தங்களுடைய வாழ்வாதாரத்தையே அழுத்துள்ளதாக மிகுந்த சோகத்துடன் தெரிவித்தனர்.