போதை புகையிலை வாகனங்களை குறிவைக்கும் கொள்ளை கும்பல்!

போதை புகையிலை வாகனங்களை குறிவைக்கும் கொள்ளை கும்பல்!

  ஒசூர் ராஜ்குமார்,

 தமிழகத்துக்கு, கர்நாடகா மாநிலத்திலிருந்து குட்கா போதை புகையிலை தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட குட்கா பொருட்கள் லாரிகளில் லோடு ஆனவுடன், அது  குறித்த தகவலை அறிந்துக் கொள்ளும்  வழிப்பறி கும்பல் சம்மந்தப்பட்ட வாகனங்களை மடக்கி லட்சக்கணக்காண போதை வஸ்துக்களை அபகரித்துச் எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். 

  குறிப்பாக இது போன்ற கொள்ளை கும்பல் கிருஷ்ணகிரி அருகே தான் வாகனங்களை மடக்குகி  ஓட்டுநர்களிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

    பணம் கொடுக்கவில்லை என்றால் அதில் இருக்கும் குட்கா பொருட்களை எடுத்துக் கொண்டு லாரியை ஓரங்கட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.

 இந்நிலைஞ்யில் நேற்று முன்தினமும், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்தி வருவதையறிந்த கடத்தல் கும்பல், கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலை ஆஞ்சநேயர் கோவில் அருகே கன்டெய்னர் லாரியை மறித்து பணம் பறிக்க முயன்றனர்.

அப்போது இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசை கண்டதும், குட்கா கடத்தல் கும்பல், லாரியை விட்டு விட்டு தப்பிய நிலையில், தகராறில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் பிடிபட்டனர்.

  குட்கா பொருட்களுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய குட்கா கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். குட்கா கடத்தல் வாகனங்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை மடக்கிய போலிசார் அவர்கள் பாணியில் விசாரித்து வருகிறார்கள்.