மருத்துவ துறை பெண்ணுக்கு யோகா மாஸ்ட்டர் செக்ஸ் டார்ச்சர்!

மருத்துவ துறை பெண்ணுக்கு யோகா மாஸ்ட்டர் செக்ஸ் டார்ச்சர்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

   இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த யோகா பயிற்சி ஆசிரியர் யோகராஜை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கோமளவள்ளி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: எனக்கு 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் யோகராஜ் என்கிற பூவேந்திரன் சிதம்பரம் என்பவர் அறிமுகமானார். அவர் யோகா கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் என்று சொன்னார்

  மருத்துவத் துறையில் பணிபுரிந்து வருந்த நான் யோகா கற்றுக்கொள்ள அவருடைய வகுப்பில் சேர்ந்தேன். அவர்,வாட்ஸ்அப் மூலம் எனக்கு ஆன்மிக மெசேஜ்களை அனுப்பினார்.

   பிறகு என்னைக் காதலிப்பது போன்ற மெசேஜ்களை அனுப்பினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். பிறகு ஒருநாள் எனக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதனை வீடியோவாக எடுத்து என்னை மிரட்டி வந்தாக அந்த இளம்பெண் புகாரில் தெரிவிததுள்ளார்.

 இதே யோக பயிற்சியாளர் யோகராஜ் மீது திருப்பூர், மும்பை, ஹாங்காங் போன்ற இடங்களில் பாலியல் புகார் உள்ளதாகவும் இளம் பெண் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் யோக பயிற்சியாளர் யோகராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்பதை பெண்கள் புரிந்துக் கொண்டு அடுத்தவரிடம் பழக வேண்டும்.