மனம் கசந்து பேசும் காவல் துறை அன்பர்!

தமிழன்ராஜா,
பணிச்சுமை, அலுவலர்களில் அதிகார தோரணை ஆகியவற்றால் மனம் நொந்து போன ஒரு காவலர் புலம்பி தள்ளியிருக்கிறார்.
காவல்துறையினர் படும் மனவேதனை, பணிச்சுமை, மன அழுத்தம் இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் காவல் துறை பணியாளருக்கு ஒருநாள் விடுப்பு அளித்த அறிவிப்பு காணல் நீராகவே உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்தில் உள்ள பல காவலர்கள் மண்டையபிய்த்துக் கொள்ளும் நிலையை உயர் அலுவலர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
அப்படிப்பட்ட உயர் அலுவலர்கள் மனதளவில் மாற வேண்டும்.
இப்படிகருதிய ஒரு காவலர் பொருத்தப் பார்த்து பொங்கி எழுந்துள்ளார்.
அவரது ஆதங்கத்தை ஆடியோ வடிவில் பதிவிட்டுள்ளார்.
களத்தில் இறங்கி இரவுப் பகல் பாராது பணி செய்யும் காவல் துறைபணியாளர்களை இயந்திரமாக பார்காமல் மனிதராக பார்கவேண்டும்.
தொடர்பணி என்பது காவலர்களின் நற்பெயரை கெடுத்துவிடும். என்பது உன்மை.
எனவே காவல்துறை உயர் அதிகாரிகள் காலிபணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
மேலதிகாரிகளுக்கு தெரிவித்து காலிப்பணியிடத்தை நிரப்பினால் பணிச்சுமை வரவே வராது.
காவல் பணியாளர்கள் நலன்கருதியும், காவல் பணியில் தொய்வு ஏற்படாமால் இருக்க வாரத்தில் ஒருநாள் விடும்முறையை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குழு அமைத்து முதல்வர்ஆணையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அப்போதுதான் காவல் துறையில் மன உளைச்சல் வராது.
இவ்வாறு ஆடியோ வெளியிட்டதை குற்றமாக கருதாமல் பணியாளர் கோரிக்கையாக எடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் எங்கள் மனச்சுமையை போக்க வேண்டும் என்று ஒருவர் புலம்பலோடு கோரிக்கை வைத்துள்ளார்.!