ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் ஆர்பாட்டம்!

கு.அசோக்,
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காததை கண்டித்தும் மத்திய பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல்களுக்கு துணை போகும் கார்பரேட் நிறுவனங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
வேலூர்மாவட்டம், வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத்தலைவர் டீக்காராமன் தலைமையில் தேர்தல் பத்திர ஊழல்களை கண்டித்தும் அதனை வெளிப்படுத்தாத பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்தும், பாஜகவுக்கு துணை போகும் கார்பரேட் களின் ஊழல்களை கண்டித்தும் ஆர்பாட்டமானது நடந்தது.
இதில் சிறுபான்மை பிரிவு மாவட்டத்தலைவர் வாஹீத் பாஷா மற்றும் திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று கடந்த பத்தாண்டுகளில் கார்பரேட்டுகளின் 16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மத்திய அரசு பல ஆயிரம் கோடிகளை தேர்தல் பத்திரம் மூலம் பெற்றதை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.