அபேஸ் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்பு! உரியவர்களிடம் வாகனங்கள் ஒப்படைப்பு!

ஜி.கே.சேகரன்,
வாகன சோதனையின்போது பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனம் களவாடிய பலே ஆசாமி கைது-இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பனந்தோப்பு பகுதியில் நேற்று இரவு கந்திலி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மகன் மணிமாது (55) என்பது தெரியவந்தது.
அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது மானவள்ளி பகுதியை சேர்ந்த நாகேஷ் என்பவரின் இரு சக்கர வாகனத்தையும், சரிதா என்பவரின் இருசக்கர வாகனம் களவாடி அதே பகுதி குடோனில் மறைத்து வைத்திருப்பது பெரிய வந்தது.
இரண்டு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனம் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மணிமாது என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், கந்திலி காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் அஜித்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் இருசக்கர வாகனத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.