பேருந்து பிரேக் பிடிக்காததால் அடுத்தடுத்து மோதி விபத்து!

பேருந்து பிரேக் பிடிக்காததால் அடுத்தடுத்து மோதி விபத்து!

  கு.அசோக்,

ஆம்பூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி தனியார் பேருந்து மோதியது. விபத்த்தில் பேருந்து ஓட்டுனர் உட்பட 15 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 வேலூர்மாவட்டம், குடியாத்தத்தில் இருந்து 30 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின் புறமும், கார் மீதும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

 தனியார் பேருந்து முன்பக்கம் சேதமடைந்ததில்  பேருந்து ஓட்டுனர் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் பயணிகள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் பேருந்தில் பயணம் செய்த 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து முதலுதவி பெற்று வீடு திரும்பினர்.

 ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேக்பிடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.