துப்புறவு பணியாளர்கள் சம்பளத்தில் கோடிகளை சுருட்டிய நகராட்சி!

துப்புறவு பணியாளர்கள் சம்பளத்தில் கோடிகளை சுருட்டிய நகராட்சி!

எஸ்.பிரபு, 

  நகராட்சி ஊழியர்களின் பெயரில் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற நகராட்சி ஆணையாளர்! திருப்பி செலுத்தாமல் காலம் கடத்தி வருவதால் ஊழியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில், திருப்பத்தூர் நகராட்சி பணியாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு வங்கியில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு 122 துப்புரவு பணியாளர்களின் பெயரில் சுமார் 6.50 கோடி ருபாய் கடன் பெற்றுள்ளனர்.

இந்த கடன் பணத்துக்கு மாத தவணை ஊழியர்களின் சம்பள பணத்தில் நகராட்சி நிர்வாகம் பிடித்தம் செய்துவிடும்.

அவ்வாறு பிடித்தம் செய்த தொகையினை மேற்படி கடன் பெற்ற கூட்டுறவு சங்கத்துக்கு நகராட்சி தான் திருப்பி செலுத்த வேண்டும்.

இதில் ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்துக்கொண்ட நகராட்சி நிர்வாகம், அதன் சார்பில் செலுத்த வேண்டிய தவணை தொகையை செலுத்தாமல் 19 மாதங்களாக  ஏமாற்றி வருகிறது.

  நகராட்சியில் துப்புறவு வேலை செய்கிறோம், நமக்கு நகராட்சி நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்கும் என்று நம்பிய அப்பாவி ஊழியர்களை நகராட்சி ஆணையாளர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்.

 எங்கள் கடனுக்கான தவணைப் பணத்தை எங்கள் சம்பளத்தில் பிடித்து வைத்துள்ள நகராட்சி நிர்வாகம், மேற்படி கடன் சங்கத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை கட்டி முடித்து விட்டு மீண்டும் எங்களுக்கு கடன் பெற வழிவகை செய்ய வேண்டும் என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

   இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் துப்புறவு பணியாளர்கள் கேட்டதற்கு, நிர்வாகத்தின் விசயம் அதில் நீங்கள் தலையிட கூடாது என்று மிரட்டும் தொனியில் பேசி அனுப்பி உள்ளனர்.

  இதனால் செய்வது அறியாமல் திகைத்த நகராட்சி ஊழியர்கள் கூட்டுறவு வங்கியில் முறையிட்டு உள்ளனர். ஆனால் ஆண்டுகள் கடந்தும் கூட அந்த தொகையை நகராட்சி நிர்வாகம் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.. எனவே இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு நகராட்சி ஆணையாளரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

 அவர் கூட்டுறவு வங்கியில் கட்டாமல் விட்ட தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என்று அப்பாவியாய் கோருகின்றனர்.

 துப்புறவு தொழிலாளிகளின் சேவையை பாராட்ட வேண்டிய அதிகாரிகள் அவர்கள் மீது கடனை வாங்கி அதுல கொசு பிடித்தோம், கொசு ரத்தத்தை டெஸ்ட் செய்தோம் என்று கணக்கு காட்டி கோடிக்கணக்கில் பணத்தை அமுக்கியுள்ளனர்.

  இந்த மாதிரியான கூத்து தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நடந்து வருகிறது.