பாலிஷ் கற்களுக்கு நடுவே கஞ்சா மூட்டைகள்!

கு.அசோக்,
விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளாவிற்கு லாரி மூலம் கடத்திச் சென்ற 10 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா, லாரி பறிமுதல் இருவர் கைது. போதை பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை.
வேலூர் போதை பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர், வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போடும் கற்களை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அதில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்துவது தெரியவந்தது. இதனையடுத்து கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்ற சுமார் 100 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட ஈரோட்டை சேர்ந்த வாகன உரிமையாளர் சதாசிவம் (32), திருச்சியை சேர்ந்த ஓட்டுநர் பாண்டியன் (26) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூபாய் பத்து லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.