கொலை செய்யப்பட்டு அகழியில் வீசப்பட்டவர் போலிஸ் இன்பார்மராம்! தூண்டிலாக செயல் பட்ட இளம் பெண் கைது!

கொலை செய்யப்பட்டு அகழியில் வீசப்பட்டவர் போலிஸ் இன்பார்மராம்! தூண்டிலாக செயல் பட்ட இளம் பெண் கைது!

 ஜி.கே.சேகரன்,

 கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தடயமே இல்லாமல் இருந்தது. ஆரம்பகட்ட விசாரணையில் துளிகூட முன்னேற்றம் காணப்படவில்லை. அப்படியிருக்க, வேலூர் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப மற்றும் மாவட்ட எஸ்.பி.நெ.மணிவண்ணன், இ.கா.ப ஆகியோரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி இந்த கொலைவழக்கில் வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்திருக்கிறார்கள்.

 இது பற்றின விவரம் வருமாறு,

    வேலூர் கோட்டை அகழியில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி கழுத்துறுத்து  கொலை செய்து மூட்டையாக கட்டப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத இளைஞரின் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.இறந்தவர் யார்  எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது கடந்த இரண்டு மாதமாக தெரியாமல் இருந்த நிலையில், 2 தனிப்படைகள் அமைத்து டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.

 அதன் ஒரு பகுதியாக சோஷியல் மீடியா, மற்றும் பிட் நோட்டில், ஊடகம் சிலவற்றில் இது தொடர்பாக இறந்தவரின் கையில்  டேட்டு போடப்பட்டிருந்த விவரங்களை டிஎஸ்பி திருநாவுக்கரவு வெளியிட வைத்தார்.

 இந்நிலையில் இறந்தவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 25 வயதுடைய சிரஞ்சீவி என்பதும், 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து கோட்டை அகழியில் வீசியதும் தெரியவந்துள்ளது.

 கொலை செய்யப்பட்ட சிரஞ்சீவியும் பல வழக்குகளில் தொடர்புடையவர்: போலீஸ் இன்பார்மராக இருந்து வந்துள்ளார்.

 ஆந்திர மாநிலத்தில் முக்கிய குற்றவாளியான அஜித் மற்றும் விக்கி ஆகியோர் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது குறித்து சிரஞ்சீவி போலீசாருக்கு தகவல் கொடுத்த ஆத்திரத்தில், வேலூர் கோட்டை அகழிக்கு இளம் பெண் ஜெயஸ்ரீ மூலமாக வரவழைத்து திட்டமிட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிந்தது.

 பின்னர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாகாயம் பகுதியைச் சேர்ந்த பரத், வேலூர் பலவன் சாத்து குப்பம் பகுதியை சேர்ந்த அப்பு மற்றும் சென்னையை சேர்ந்த இளம் பெண் ஜெயஸ்ரீ ஆகியவரை கைது செய்தனர். சென்னையை சேர்ந்த மாரிமுத்து மற்றும் வேலூரைச் சேர்ந்த பத்ரி ஆகியோர் சிரஞ்சீவி கொலை சம்பந்தப்பட்டவராக உள்ள நிலையில் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் தற்போது உள்ளனர்.

 மீதமுள்ள முக்கிய குற்றவாளிகளான சென்னையை சேர்ந்த அஜித், விக்கி மற்றும் வேலூரைச் சேர்ந்த காளி ஆகிய 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.  

 கைதாகி செய்யப்பட்ட இளம் பெண்ணை வேலூர் பெண்கள் தனி சிறையிலும், பரத் மற்றும் அப்புவை வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.