சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் வாக்கு பதிவு தொடங்கியது! நக்சல் மிரட்டலால் போலிசார் அலார்ட்!

சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் வாக்கு பதிவு தொடங்கியது! நக்சல் மிரட்டலால் போலிசார் அலார்ட்!

 ம.பா.கெஜராஜ்,

 சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்குபதிவு பரபரப்பாக தொடங்கியது.    

 சத்தீஸ்கர்,

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதே போல் மிசோரம் மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

 இந்நிலையில் சத்தீஸ்கரில் மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 40.78 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.  இங்கு மட்டும் 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

   சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நடைபெறும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள் நக்சல் தீவிரவாதிகளின் கைங்கிரியம் நிறைந்த பகுதியாகும். இதன்காரணமாக அந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக சொல்லவேண்டுமானால் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 600 வாக்குச் சாவடிகளில், சுமார் 40,000 பேர் சிஆர்பிஎப் வீரர்கள் உட்பட 60,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். 

 அப்படியிருக்க தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக வாக்குப்பதிவு நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் காலை 7 மணி முதல் 3 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்

 இதர பகுதிகளில் வழக்கம்போல காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  இந்நிலையில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சத்தீஸ்கரின் கன்கர், பிஜாபூர் பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல்களை நடத்தினர். இதில் 2 போலீஸார் படுகாயமடைந்தனர். நாராயண்பூர் பகுதியில் 4 கிலோ வெடிபொருட்களை மட்டும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

 மேலும், சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டமாக வரும் 17-ம் தேதி 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மிசோரம் - நான்குமுனை போட்டி,

 மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

  அப்படியிருக்க ஆளும் தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் முன்னணி, காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் 23 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

   அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக வினர் மட்டும் 23 தொகுதிகளில் களம் காண்கிறார்கள், இதில் 8.57 லட்சம் பேர் வாக்குரிமைபெற்றுள்ளனர்.

  அவர்களுக்காக 1,274 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள 30 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுஉள்ளன. மாநில போலீஸார் மற்றும்மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த 9,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

   மியான்மருடன் 510 கி.மீ.ம் வங்கதேசத்துடன் 318 கி.மீ. எல்லையை மிசோரம் மாநிலம் பகிர்ந்து கொண்டிருக்கிற நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி மிசோரமின் சர்வதேச எல்லைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன.