சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

ஜி.சாந்தகுமார்,
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள சிலர் மக்களோடு மக்களாக வசித்து வருவதாக கூறப்படும் நிலையில் சென்னையில் மூன்று இடங்களில் என்.ஐ.ஏ. வினர் சோதனை நடத்தி வருகிறார்கள். மாநில போலீஸ் பாதுகாப்புடன இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக் கூடிய நபர்களின் இல்லங்களில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.