பள்ளி உரிமையாளர் கடத்தப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

பள்ளி உரிமையாளர் கடத்தப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

 ஜி.கே.சேகரன்,

  வாணியம்பாடியில் தனியார் பள்ளி உரிமையாளர் கடத்தப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர்  செந்தில்குமார் கடந்த 2018ம் ஆண்டு விடியற்காலை நியூ டவுன் தேசிய நெடுஞ்சாலையில்  நடை பயிற்சி சென்றபோது மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். அவரை கடத்தி சென்ற மர்ம கும்பல் அவரது குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம்  பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

  இது குறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டு  அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கடத்தி செல்லபட்ட தனியார் பள்ளி தாளாளரை மீட்டு கடத்தலில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்க அப்போதைய  வேலூர் ஏடிஎஸ்பியும், தற்போது சென்னை ஆவடி துணை ஆணையராக உள்ள பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  அதில் ஆம்பூர் அடுத்த வடச்சேரி பகுதியை சேர்ந்த ஹரி, சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த கலீல் இப்ராஹிம், சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த முத்து ஆகியோர்  செந்தில்குமாரை¢  பெங்களூர் நோக்கி காரில் கடத்திச் சென்ற போது அவர்களை பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஓசூரில் வைத்து அவர்களை கைது செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக திருப்பத்தூர் கூடுதல் மாவட்ட  நீதிமன்றத்தில்  வழக்கு  நடைபெற்று வந்த நிலையில்  இந்த வழக்கில்  குற்றம் சட்டபட்ட 4 பேருக்கும்  ஆயுள் தண்டனை மற்றும் தலா. ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு வழங்கினார்.இதை தொடர்ந்து இவர்கள் 4 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.