கால்நடைகள் விவசாயிகளின் சொத்து! ஏ.பி.நந்தகுமார் எம். எல் .ஏ.தகவல்!!

ம.பா.கெஜராஜ்,
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இரண்டாம் கட்டமாக இடப்பட்டு வருகிறது.
அப்படியிருக்க மேற்படி தடுப்பூசி செலுத்தும் நிகழ்வினை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பொய்கைமோட்டூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் துவக்கி வைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் 1,95,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளாக அனைத்து ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு நாட்குறிப்பேடு வழங்கி இதன் மூலம் அந்தந்த பஞ்சாயத்துகளிலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் வாயிலாக ஊராட்சி செயலாளர்கள் மூலம் முன்னேற்பாடு அறிவிப்பினை அப்பகுதி கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறார்கள்.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததின்பால் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மருத்துவர்கள் அதிகப்படுத்தவதற்கான ஏற்பாடுகளையும், செய்து கொடுத்துள்ளார்.
கிராமம் கிராமமாக செல்ல வாகன ஏற்பாடுகளையும் செய்து தருவதாக தெரிவித்துள்ளார்.
கால்நடைகள் வேளாண் விவசாயிகளின் உற்ற நண்பன் மற்றும் அவர்களுடைய சொத்தும் ஆகும் என்றார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஒன்றிய குழு தலைவர் திரு.மு.பாபு, மண்டல இணை இயக்குநர், உதவி இயக்குநர், மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்