ராஜ கண்ணப்பன் மீது முதல்வருக்கு கோபமா?

ராஜ கண்ணப்பன் மீது முதல்வருக்கு கோபமா?

 ம.பா.கெஜராஜ்,

 முதலமைச்சர் இதுவரை எந்த மந்திரியிடமும் கோபம் கொண்டதில்லை. இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அவர் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

 தமிழக போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் மீது ஊழல் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்கிறார்கள். இதனால் ஏற்கனவே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த விவரம் வருமாறு,

 சென்னை எழிலகத்தில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஆணையரகத்தில், துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் நடராஜன்.

 அவர் பணியாற்று அலுவலகத்தில் மார்ச் 14ஆம் தேதி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

 அதில் சுமார் 35 லட்ச ரூபாய் ரொக்கம், பணம் எண்ணும் எந்திரம் கைப்பற்றப்பட்டது.

  அதன் பேரில் நடராஜன் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

 துணை ஆணையர் நடராஜன் சிக்கிய இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் குறித்தும் புகார்கள் மேலிட கைகளுக்கு கிடைத்ததாம்.

  ஆகவே பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்து அடுத்த அமைச்சரவை மாற்றத்துக்குப் பின்னர் போக்குவரத்து துறை அமைச்சராக ராஜ கண்னப்பனுக்கு கேள்விக்குறீதான் என்கிறார்கள்.  

   தமிழக அரசு மீது ஊழல் புகார் எதுவும் வந்து விடக்கூடாது என அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துவந்தார் முதல்வர்.

  இதே அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது தீபாவளி சமயத்திலேயே ஒரு புகார் வந்தது. போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கும் தீபாவளி ஸ்வீட்ஸ்களை ஆவின் நிறுவனத்தில் வாங்காமல் கமிஷனுக்காக வேறு ஒரு தனியார் நிறுவனத்திடம் வாங்க டெண்டர் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆரம்பத்திலேயே இந்த விவகாரம் ஊடகங்கள் மூலம் வெளியே வந்ததால் ஆவின் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது.

 இந்நிலையில் அவரது துறையின் முக்கிய அதிகாரி லஞ்ச வழக்கு பிரிவில் சிக்கியிருப்பது அமைச்சரையும் பாதிக்கக்கூடும் என்கிறார்கள்.