சோஷியல் மீடியா குற்றம் தொடர்பாக தயக்கமுமின்றி புகார் அளிக்கனும்! கோவை எஸ்.பி.வேண்டுகோள்!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
சமூக வலைதள குற்ற தொடர்பாக தயக்கமுமின்றி புகார் அளிக்கனும் என்று கோவை எஸ்.பி.வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபரை காவை மாவட்ட காவல் துறை சைபர் கிரைம் பிரிவினர் கைது செய்தனர்.
கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் துடியலூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் கொடுத்த புகாரில் கடந்த மாதம் தனது இன்ஸ்ட்ராகிராம்-ல் தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு தன்னை ஆபாசமாக மார்பிங் செய்து வீடியோக்களை வெளியிடப்பட்டிருந்ததாகவும் மேலும் தனது தந்தையின் டுவிட்டர் (ட்விட்டர்) பக்கத்திலும் மேற்கண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடப்பட்டிருந்ததாகவும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது தொடர்பாக இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கூறி புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர், இக்குற்றத்தில் தொடர்புடைய கோவை காந்தி பார்க் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் சஞ்சய்குமார் (22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மேற்படி குற்ற செயலுக்கு பயன்படுத்திய செல்போன் -1, சிம் கார்டு-1 மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சமூக வலைதளங்களில் இவ்வாறு பெண்களை தவறாக சித்தரிப்பவர்கள் மீது கோவை மாவட்ட காவல்துறை மிகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் மேலும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் இவ்வாறு சமூக வலைதள குற்றங்களில் பாதிக்கப்படும்போது, இது தொடர்பாக எவ்வித தயக்கமுமின்றி புகார் அளிக்க முன் வரவேண்டும். அவ்வாறு புகார் கொடுக்கும் பட்சத்தில் புகார் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட இவ்வாறான குற்றங்கள் நடைபெறாமல் வருங்காலங்களில் தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.