மாடுகளை பட்டினி போட்ட ஆபிசர்ஸ்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடியில் மணல் கடத்தி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்த வருவாய் துறையினர் மாடுகளை பட்டினி போட்டிருக்கிறார்கள். தீவனம் தண்ணீர் எதுவும் கொடுக்காமல் காவல் நிலையம் முன்பு கட்டி வைத்து கொடுமை செய்துள்ளார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியில் வட்டாட்சியர் சாந்தி தலைமையிலான வருவாய்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அவ்வழியாக மணல் கடத்தி வந்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மாட்டு வண்டியை நிறுத்தியுள்ளனர்.
அங்கு வருவாய்த்துறையினர் இருப்பதை கண்ட மாட்டு வண்டி உரிமையாளர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் 2 மாடுகளுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், அவற்றை வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு, 2 மாடுகளையும் நகர காவல் நிலையத்தின் முன்பு கட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த 2 மாடுகளை சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக தீவனம் மற்றும் தண்ணீர் இன்றி கொளுத்தும் வெயிலில் கட்டி வைத்திருந்தனர்.
அதைப் பார்த்த பொதுமக்களில் சிலர் மாடுகளுக்கு தண்ணிர் கொடுத்தனர்.
தப்பியோடிய மாட்டு உரிமையாளருக்கும் சரி வருவாய் துறை மற்றும் போலிசாருக்கும் சரி மனசாட்யே இல்லீங்கோ.