திருவாருர்க்கு படையெடுக்கும் வேலூர் மாவட்ட தி.மு.க!

திருவாருர்க்கு படையெடுக்கும் வேலூர் மாவட்ட தி.மு.க!

ஜி.கே.சேகரன்,

திருவாருர்க்கு வேலூர் மாவட்ட திமுகவினர் பெரும்பாண்மையாக செல்ல வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் துவக்கத்தை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் - 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஜனாதிபதியை புறக்கணித்ததற்காக மத்திய அரசுக்கு கண்டனம்  தெரிவித்தும்  - கர்நாடகவில் காங்கிரஸிற்கு வாக்களித்து மக்களுக்கு நன்றி தெரிவித்து - வேலூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் மத்திய மாவட்ட அலுவலகத்தில் திமுக அவைத்தலைவர் முகமது சகி தலைமையில் மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

 திமுக மத்திய மாவட்ட செயலாளரும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார்,வேலூர் மாநகர செயலாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் வேலூர் மேயர் சுஜாதா உள்ளிட்ட திமுகவினர் திரளானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

 இந்த கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா துவக்கத்தை  வரும் ஜுன் 3 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.

 20-6-2024 அன்று திருவாரூரில் கருணாநிதி கோட்டம் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் அதில் வேலூர் மாவட்டத்தின் சார்பில் அதிக அளவில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டுமெனவும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலின் பேரில் ஜனாதிபதியை புறக்கணித்த பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்தும் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் செல்லாது என கூறிய பிரதமர் மோடியின் கொடுஞ்செயலை கண்டித்தும் கண்டனம் தெரிவித்தும் கர்நாடகாவில் காங்கிரசிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் அதிக அளவில் திமுகவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.