பெண்கள் கல்லூரி செகரட்டரி மீது மாணவி புகார்! சட்டம் ஒழுங்கு கேள்விக் குறி!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர எல்லைக்குள் தனியார் பெண்கள் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரிக்கு செகரட்டரியாக இருக்கும் நபருக்கு சுமார் 70 வயது இருக்கும். அவர் மாணவிக்கு இன்னல்கள் ஏற்படுத்தியதாக கூறி 29.05.2023 -ம் தேதியன்று மாலை சிலர் ஆர்பாட்டத்தில் இறங்கினர்.
பாகாயம் காவல் நிலையத்தின் முன் நடந்த இந்த ஆர்பாட்டத்தை தடுத்து நிறுத்திய போலிசார் அவர்களை கலைந்து போக செய்தார்கள்.
எதற்காக இந்த ஆர்பாட்ட முயற்சி என்று விசாரித்த போது,
மேற்படி கல்லூரியில் நியூட்ரிஷியன் பாடப்பிரிவில் மாணவி ஒருவர் சேர்ந்துள்ளார். அவர் கல்லூரியில் சேர்ந்த பின்னர், பெற்றோர் நிச்சயித்தபடி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் அடிக்கடி கல்லூரிக்கு வராமல் விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று.
இந்நிலையில் செமஸ்ட்டர் பரிட்சை காலம் வந்த போது சம்மந்தப்பட்ட மாணவிக்கு போதிய அட்டனன்ஸ் இல்லை என்று காரணம் காட்டி 6,000/- ரூபாயை மாணவியிடமிருந்து கல்லூரி நிர்வாகம் வசூல் செய்திருக்கிறது. மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் இது குறித்து விசாரித்த போது, அட்டனன்ஸ் இல்லை என்றால் 325 ரூபாய் தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் 6,000/ ம் எதற்காக வசூல் செய்தார்கள் என்று கேட்டுள்ளார்.
அதன் பிறகு கல்லூரிக்கு சென்ற மாணவி அதிகமாக கட்டணம் வசூலித்ததை சுட்டிக்காட்டி அந்த பணத்தை திருப்பி கொடுங்கள் என்று பிரின்ஸ்பாலிடம் கேட்டதற்கு, எனக்கு எதுவும் தெரியாதும்மா, ஆபிசில் போய் கேட்டுக்கொள் என்று கைகாட்டிவிட்டு கழன்றுக் கொண்டாராம்.
அதன் பேரில் ஆபிஸ் சென்று கேட்டதற்கு செக்கரட்டரியைப் போய் பார் என்று அவர் பக்கம் கைநீட்டியுள்ளனர்.
அந்த மாணவி செக்ரட்டரியை சந்தித்து அதிக பணம் வசூல் செய்திருப்பதை அவரிடமும் சுட்டிக்காட்டி பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு அவர் அந்த மாணவியை சகட்டு மேனிக்கு வசைபாடி பணத்தையும், அதனுடன் டிசியையும் வாங்கிக்கொண்டு போ என்று சொன்னாராம்.
அந்த மாணவி கல்லூரி கேண்டீன் அருகே வந்து அழுதுக் கொண்டிருந்தாராம், அப்போது மாலை ஆறு மணி.
பின்னர் அந்த மாணவி இந்த சங்கதிகளை யாருக்கோ லைவ்வில் போட்டு என்னை இரண்டு நாட்கள் அலைகழிக்கிறார்கள், வேற மாதிரி பேசுறாங்க என்று அழுது புலம்பினாராம்.
அப்போது அந்த கல்லூரியின் செக்ரட்டரி வெளியே வந்து, நீ இன்னுமா இங்க நிற்குற? போகலை, நான் தான் நாளை மறுநாள் வந்து டிசியும், காசும் வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டேனே வெளியில் போ என்று அதட்டலாக சொல்லியுள்ளார்.
லைவில் இருந்த அந்த மாணவி உங்க பெயர் என்ன என்று கேட்டிருக்கிறார், என் பெயரையே கேக்குறியா என்று கோபப்பட்ட செக்ரட்டரி வண்டியை விட்டு கோபமாக இறங்கிய போது, அந்த மாணவி லைவை கட் செய்துவிட்டு போட்டோ எடுத்துள்ளார். ஆத்திரப்பட்ட அவர், அந்த மாணவியின் செல் போனை பிடுங்கி போட்டோக்களை டெலிட் செய்துவிட்டு அந்த மாணவியை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இது தொடர்பாக அந்த மாணவி பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலிசார் கல்லூரிக்கு சென்றுள்ளனர். அப்போது செகரட்டரியோ, முதல்வரோ, அலுவலக ஊழியர்களோ, அங்கு இல்லை என்பதால் வாட்மேனை அழைத்து நாளை காலை செகரட்டரியின் பெயரை குறிப்பிட்டு அவர் ஸ்டேஷனுக்கு வரவேண்டும் என்று சொல்லிவிட்டு திருபியிருக்கிறார்கள்.
ஆனால் போலிசின் அழைப்பை ஊதாசீனப்படுத்திய கல்லூரி தரப்பினர் காவல் நிலையத்துக்கு செல்லவில்லை. ஆகவே, 24 ஆம் தேதி சுமார் 11.30. மணியளவில் போலிசார் மீண்டும் கல்லூரிக்கு சென்றனர். அப்போது அந்த மாணவியின் கணவர் உள்ளிட்ட உறவினர்கள் உடன் சென்றுள்ளார்கள்.
பதறிப்போன கல்லூரி நிர்வாகம் மாணவியிடம் அதிக கட்டணமாக வசூலித்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டனர். அப்போது அங்கு முதல்வர் இல்லை என்பதால், பின்னர் சான்றிதழகளில் கையொப்பம் பெற்று காவல் நிலையத்தில் வைத்து அவற்றை அந்த மாணவிக்கு திருப்பி கொடுத்திருக்கிறார்கள்.
இருந்தாலும் கூட அந்த மாணவி செகரட்டரி மீது பெண் கொடுமை உள்ளிட்ட புகார் தெரிவித்து, அதன் பேரில் குற்ற எண் 156/2023 - வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அதில் 294-பி, 506/1, சட்டப் பிரிவு 4 ஆஃப் பெண்கள் கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவுகள் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட கலூரியின் செயலாளரிடம் இது குறித்த உண்மை நிலவரம் அறிய முற்பட்டோம், அவர் நமது கைபேசி அழைப்பை எடுக்கவில்லை. ஆகவே கல்லூரி அலுவலகத்தில் பேசிய போது எங்களுக்கு அபிஷியலாக எதுவும் தெரியாது, அபிஷியலா பிரஸ்ஸிக்கு வந்திருந்தால் பேசலாம் என்று சொல்லி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தார்.
பாகாயம் காவல் நிலைய அதிகாரிகளும் கடந்த 24 ஆம் தேதிய பதியப்பட்ட மேற்படி வழக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியே ஒரு சாரார் ஆர்பாட்டம் செய்ய முயன்றுள்ளார்கள். அந்த கல்லூரியின் செக்ரட்டரியை கைது செய் என்பது தான் அவர்களின் கோஷமே என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
"பெத்தகை" மீது இந்த புகார் என்பதால், நடவடிக்கையில் தொய்வு காணப்படுகிறதாம். இதை சுட்டிக்காட்டும் புகாதாரர் அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகிறார்களாம்.
இப்படியே போனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்லவா ஏற்படும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.