பெண்  குலத்திற்கு பெருமை சேர்த்தவர்க்கு அரசாங்க விருது! திருப்பத்தூர் ஆட்சியர் தகவல்!

பெண்  குலத்திற்கு பெருமை சேர்த்தவர்க்கு அரசாங்க விருது! திருப்பத்தூர் ஆட்சியர் தகவல்!

 ஆர்.ரமேஷ்,

  2023 ஆம் ஆண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தின விழாவின் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

   சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் (22காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம் (ம) சான்று வழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000/- ரொக்கப்பரிசுடன், 10  கிராம் (22 கராட்) எடையுள்ள தங்கப்பதக்கம் (ம) சான்று வழங்கப்பட உள்ளது.

   இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, சிறந்த சமூக சேவகர் (ம)  தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 15.05.2023 அன்று முதல் பதிவேற்றம் செய்யலாம்.

  சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்  10.06.2023

மேற்படி சிறந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள்:

  • தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்,
  • குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்  குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • தொண்டு நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். 10.06.2023-க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்க இயலாது.

கையேட்டில் (Booklet) இணைக்கப்பட வேண்டியவை:

  • பொருளடக்கம் (ம) பக்க எண் (index).
  • இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் உயிர் தரவு (Bio data), சுயசரிதை (ம) passport size photos-2.
  • ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) soft & Hard copy).
  • படிவம் 1 & 11 (தமிழ் - மருதம் எழுத்துருவில் (ம) ஆங்கிலம்) - soft copy & Hard copy).
  • தேசிய (ம) உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம் / விருதின் பெயர் / யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்),
  • கையேட்டில் விருது பெற்ற புகைப்படம் / சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
  • சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்) இணைக்கப்பட வேண்டும்.
  • சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு.
  • சமூக சேவையாளரின்/ நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம்.
  • தொண்டு நிறுவனத்தின் பதிவு, உரிமம், ஆண்டறிக்கை.
  • சமூகப் பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று.
  • கையேடு (Booklet) தமிழ் (ம) ஆங்கிலம் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.

   மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதினை பெற உரிய முறையில் இணையதளம் வாயிலாக அதன் விவரங்கள் அடங்கிய கையேட்டினை (Booklet) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முதல் தளம் B-Block  ல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பித்து, மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 04179-299561, தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.