ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு வட கொரியா ஆயுதம் வழங்குகிறது!

ஆர்.ரவிகாலேப்,
ஹமாஸ் தீவரவாத குழுவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 7 ஆம் தேதியன்று துவங்கிய சண்டை தற்போது14வது நாளை எட்டியிருக்கிறது. இஸ்ரேலுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஹமாஸிடம் ஆயுதக்குவியல் வந்துக் கொண்டே இருக்கிறது. வடகொரியாவே இதற்கு காரணம் கண்டுபிடித்த இஸ்ரேல் ஆடிவிட்டது. குறிப்பாக
வடகொரியாவின் எப் - 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவது கன்பார்ம் ஆகியிருக்கிறது.
இஸ்ரேல் நாட்டு ஊடகங்கள் இது பற்றி தெரிவிக்கையில்,
வடகொரியாவின் எப் - 7 ஏவுகணைக ஏவுகணைகள் வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படுகின்றன. அங்கிருந்து ஹமாஸ்தீவிரவாதிகளுக்கு ஏவுகணைகள் சப்ளையாகிறது.தற்போதைய போரில் வடகொரிய ராணுவத்தின் எப் -7 ரகஏவுகணைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். இஸ்ரேல் பகுதிகளில் விழுந்த ஏவுகணைகளை ஆய்வு செய்தபோது, அவை எப்7 ஏவுகணைகள் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. பீரங்கிகளை தாக்கி அழிக்கும் வடகொரியாவின் பீனிக்ஸ் ஏவுகணைகளும் ஹமாஸ் வசம் இருக்கக்கூடும் என்று இஸ்ரேல் சந்தேகம் கொண்டிருக்கிறது.
இருந்தாலும் கூட ஹமாஸ் தீவிரவாதிகளிடம் ஆயுதங்களின் குறைந்து வருவதாகவும், அந்த அமைப்புக்கான ஆயுத தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.