கிரைம் ஸ்பாட் ஆகும் திருப்பூர்!

டி.இ.முகமது
சமீபத்தில் திருப்பூர் அருகே பல்லடம் என்ற பகுதியில் ஒரு நபர் வீட்டின் அருகே மது அருந்தியதாக செந்தில்குமார், மோகன், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகியோர் கண்டித்தனர். இதனை அடுத்து மது அருந்தி நபர் தன்னுடைய நண்பர்களை அழைத்து வந்து அந்த வீட்டில் புகுந்து நான்கு பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லட்சுமி மில்ஸ் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் மகேஷ் மாரீஸ்வரி மற்றும் புஷ்பராஜ் ஆகிய நான்கு பேரை சரமாரியாக வெட்டியுள்ளார்கள்.
படுகாயமடைந்த நான்கு பேரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூரில் அடுத்தடுத்து கத்தி வெட்டு சம்பவங்கள் நடப்பதைக்கண்டு பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.