செய்தியாளர்களின் கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு குட்நைட் சொன்ன அண்ணாமலை!

உ.சசிகுமார்,
மைக்கும் கையுமாக உள்ள நிருபர்களைப் பார்த்தவுடன் ஆவலாக அருகில் வந்து பேசக்கூடியவர் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை. ஆனால் அவர் டெல்லியிலிருந்து திரும்பிய பின்னர் அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்ட போது குட்நைட் சொல்லிவிட்டு பேட்டியை தவிர்த்திருக்கிறார். இதனால் ஏன் இந்த மாற்றமோ என்று சென்னை நிருபர்கள் யூகங்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
டெல்லியிலிருந்து நேற்று இரவு 10 மணியளவில் அண்ணாமலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரிடம் பேட்டி காண்பதற்காக மைக்குகளுடன் நிருபர்கள் தயாராக இருந்தனர். ஆனால், அண்ணாமலையோ நிருபர்களை சந்திப்பை தவிர்த்துவிட்டு அகன்று சென்றுவிட்டார்¢.
அவரை விடாத நிருபர்கள் "சார்.. டெல்லியில் நடந்தது என்ன? தலைவர்கள்ம் என்ன கேட்டார்கள்¢கள்? " என கேள்வியெழுப்பினர். அப்போது அண்ணாமலை, கையெடுத்து கும்பிட்டபடியே 'குட்நைட்' என்று நிருபர்களுக்கு சொல்லி விட்டுச் சென்றார்.