இவரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும்! வேலூர் போலிசார் நோட்டீஸ்!

இவரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும்! வேலூர் போலிசார் நோட்டீஸ்!

 ஆர்.மதன்,

வேலூர் மாவட்டத்தில் மையப்பகுதியான கோட்டை அகழியில் கொடிகம்பத்துக்கு எதிரில் கடந்த 19.10.2023 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவர் யார் எந்த ஊர் என்கிற விவரம் இதுவரை புலப்படவில்லை. இதனால் சடலத்தை அடுக்கம்பாறை அரசு கல்லூரி மருத்துவமனையிலுள்ள சவக்கிடங்கில் வைத்துள்ளது காவல் துறை தீவிரமாக புலன் ஆய்வு செய்து வருகிறார்கள்.

  இந்நிலையில் தமிழக அரசு காவல்துறை, வேலூர் மாவட்டம் சார்பில் இது குறித்து நோட்டிஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

 அதில் கூறப்பட்டிருப்பதாவது,

இறந்தவரின் அடையங்கள்

வலது முழங்கையில் கையில்K.S.CHITRA, A.P.CHIRU, MCMAP   என்று பச்சை குத்தபட்டிருக்கிறது.

 இடது  முழங் கையில் A.K.LIKKU என பச்சை குத்தப்பட்டிருக்கிறது.

 இறந்தவர் கறுப்பு நிற பேன்ட்டும் வெள்ளை கலர் கோடு போட்ட முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார்.

 அணிந்திருந்தார்.

  இவரைப்பற்றி தகவல் தெரிந்தால் வடக்கு காவல் நிலையம், 9498100364, எஸ்.பி.ஆபிஸ் 9498100356,  டிஎஸ்பி வேலூர் 9498105161, வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் 9498149544 ஆகிய எண்களுக்கு தெரிவிக்கும்படி காவல் துறை சார்பில் நோட்டிஸ் வெளியிடப்பட்டிருக்கிறது.